சுமந்திரனின் சிபாரிசில் வலி.வடக்கு, வலி.தெற்கு மக்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கிவைப்பு!

வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு பிரதேசங்களில் சுயதொழிலில் ஈடுபடும் வறுமைக்குட்பட்ட மக்களுக்கு இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனின் சிபாரிசின் அடிப்படையில் இலண்டன் வாழ் தமிழ்த் தேசிய உணர்வாளர் திரு. விசிதரன் தர்சனின் நிதி உதவியில் இந்த உலர் உணவுப் பொதிகள் கொள்வனவு செய்யப்பட்டன.

இந்த உலர் உணவுப் பொதிகள் தெல்லிப்பழை, அளவெட்டி, தையிட்டி, ஏழாலை, குப்பிளான், கட்டுவன் ஆகிய பிரதேசங்களில் வசிக்கின்ற வறுமைக்குட்பட்ட குடும்பங்களுக்கும் தோட்ட வேலைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கும் அவர்களின் வீடுகளுக்கும் தொழிலிடமும் நாடிச்சென்று வழங்கப்பட்டன.

இந்த உலர் உணவு வழங்கும் நிகழ்வில் வலி.தெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதித் தலைவருமாகிய தியாகராஜா பிரகாஷ், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான லயன் சி.ஹரிகரன், லயன் செ.விஜயராஜ், லயன் ஐ.மயூரன் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.

ஒரு குடும்பத்துக்கு 1000 ரூபா பெறுமதியான பொருள்கள் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.