நிவாரணப் பணிக்காக சொந்த நிதியில் 5 லட்சம் ரூபா வழங்கினார் மாவை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா, நாட்டின் அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிக்காக 5 லட்சம் ரூபாவை வழங்கியுள்ளார்.

இந்த நிவாரணப் பணிகளுக்கான பொருள்கள் இன்று கொள்வனவு செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்து ஒழுங்கமைக்கப்படுகின்றன.

அடுத்துவரும் நாள்களில் இந்தப் பொருள்கள் மக்களிடம் சென்றடைய உள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.