வெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்தனர்!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த 2 ஆயிரத்து 913 பேர் தனிமைப்படுத்தலுக்காக பதிவு செய்துகொண்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவர்கள் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்படும் வரை இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் இலங்கைக்கு வருகை தந்தவர்களை பதிவு செய்வதற்கு இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததோடு பதிவு செய்யாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இன்று நண்பகல் 12 மணி வரை பதிவு செய்துகொண்டவர்களின் விபரங்களுக்கு அமைய 2,913 இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.