மட்டக்களப்பில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

மட்டக்களப்பு,  ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் சவுக்கடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் நேற்ற (புதன்கிழமை) மாலை 04.30 மணியளவில் உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாகப் பயணித்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பனை மரமொன்றில் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, பனிச்சங்கேணியைச் சேர்ந்த எஸ்.சுரேஸ்காந் (வயது 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் இதுகுறித்து ஏறாவூர் போக்குவரததுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.