அவசர தேவைகளை தீர்ப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு!

வணிகத்துறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதில்பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களை நேரடியாக தொடர்பு கொள்வதற்கான விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழியில் விடங்களை கையாள்வதற்காக பிரத்தியேகமாக பிரதிபொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் தொடர்பிலக்கங்களும் அவர்கள் கையாளும் விடயதானங்களும் வருமாறு,

மருந்தகங்கள் மற்றும் ஆய்வக சேவைகள்

பிரதி பொலிஸ்மா அதிபர் சிசிர குமார – 0718592648

துறைமுகம், விமான நிலையம், கப்பற்போக்குவரத்து முகவர்கள்

பிரதி பொலிஸ்மா அதிபர் முடித்த புஸ்செல்ல – 0718592649

முதலீட்டு மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகள்

பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த சந்திரசிறி – 0718592650

தமிழ் மொழி மூலம்

பிரதி பொலிஸ்மா அதிபர் நவாஸ் -071 859 18 62

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.