வீட்டுக்கு வீடு தோட்டம் – புதிய திட்டம் அங்குரார்ப்பணம்

நாட்டில் உணவு உற்பத்தியை விரைவுபடுத்தும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

“செழிப்புமிக்க வீட்டுத்தோட்டம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் – விவசாய திணைக்களம், விவசாய அபிவிருத்தி திணைக்களம், மற்றும் மகாவெலி அதிகார சபை என்பவற்றின் பங்களிப்புடன் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக இணையத் தளம் ஒன்றும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இணையத் தளத்தில் – வீட்டு தோட்டத்திற்குத் தேவையான விதைகள், உரம் மற்றும் தாவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்தோடு – வீட்டுத் தொட்டத்திற்குத் தேவையான ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த திட்டத்தின் மூலம் பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.