இலங்கையில் 7 வெளிநாட்டவர்களை மறைத்து வைத்திருந்த மூவர்! யாழ்ப்பாணம் சென்று வந்ததாகவும் தகவல்
திருகோணமலை – நிலாவெளி சுற்றுலா வலயப் பகுதியில் உள்ள 3 ஹோட்டல்களில் 7 வெளிநாட்டவர்களை மறைத்து வைத்திருந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் குறித்த ஹோட்டல்களின் உரிமையாளர்கள் உப்புவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உப்புவெளி பொலிஸார், குறித்த ஹோட்டல்களை நேற்று முன்தினம் இரவு சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது அங்கு 2 அமெரிக்க பிரஜைகள், 2 சீனப்பிரஜைகள், 1 பின்லாந்து பிரஜை, 1 ஸ்கொட்லாந்து பிரஜை மற்றும் 1 பிரித்தானிய பிரஜை என 7 வெளிநாட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அதே ஹோட்டல்களில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவருக்கு விசா அனுமதி காலாவதியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் யாழ்ப்பாணம், அநுராதபுரம், ஹபரணை, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை