மேலும் ஒருவர் வீடு திரும்பினார்…

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றொரு நோயாளி குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் என்று சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இனங்காணப்பட்ட 151 கொரோனா தொற்றாளர்களில் 22 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர். ஏனைய 125 பேரும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, நாட்டின் 30 வைத்தியசாலைகளில் 250 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.