ஊரடங்கை மீறி சிக்கியோர் 11 ஆயிரத்தைத் தாண்டியது! – 2, 727 வாகனங்களும் பறிமுதல்

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 11 ஆயிரத்து 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 2 ஆயிரத்து 727 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணியிலிருந்து இன்று (03) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியினுள்ளே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 20ஆம் திகதி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான 06 மணித்தியால காலப்பகுதியினுள் மட்டும் 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 70 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.