ஊரடங்கை மீறி சிக்கியோர் 11 ஆயிரத்தைத் தாண்டியது! – 2, 727 வாகனங்களும் பறிமுதல்
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 11 ஆயிரத்து 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 2 ஆயிரத்து 727 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணியிலிருந்து இன்று (03) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியினுள்ளே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 20ஆம் திகதி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான 06 மணித்தியால காலப்பகுதியினுள் மட்டும் 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 70 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை