ஊரடங்கை மீறி கைதானோர் 13,000 ஐ தாண்டியது

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இதுவரை 13,468 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

அத்தோடு 3,353 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் நாட்டில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 13,468 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இக்காலப்பகுதியில் 3,353 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.