பரிசோதனை செய்யப்பட்ட 17 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை – போதனா பணிப்பாளர்!

யாழ்ப்பாணத்தில் நேற்று (சனிக்கிழமை) பரிசோதனை செய்யப்பட்ட 17 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தங்கியிருந்த மூவருக்கும், வைத்தியசாலைக்கு வெளியே தொற்றுக்கு உள்ளனவர்களுடன் தொடர்புடைய 14 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

குறிப்பாக மானிப்பாய் பகுதியில் எட்டு பேருக்கும் அரியாலைப் பகுதியில் ஆறு பேருக்கும் இந்த பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.