ஊரடங்கை மீறிய 14,268 பேர் கைது!

ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 14 ஆயிரத்து 268 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 3 ஆயிரத்து 563 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (05) மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள்ளேயே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 20ஆம் திகதி முதல் நாட்டில் பொலிஸ் ஊரடங்குச்  சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையான 6 மணித்தியால காலப்பகுதியினுள் மட்டும் 552 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 140  வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.