மாவையின் நிதியில் அளவெட்டி மக்களுக்கு உதவி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசா தனது சொந்த நிதியில் 5 லட்சம் ரூபாவை நாளாந்த தொழில் புரிபவர்களின் வறுமை ஒழிப்புக்காக ஒதுக்கியிருந்தார்.

அளவெட்டி பிரதேசத்தில் உள்ள 3 வட்டாரங்களில் மிகவும் வறுமையிலுள்ள 75 குடும்பங்களுக்கு நேற்று உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

அளவெட்டி மத்தி பிரதேசத்தை வலி.வடக்கு பிரதேசசபையில் பிரதிநிதித்துவப்படுத்தும் லயன் செ.விஜயராஜின் வேண்டுகோலுக்கிணங்க அளவெட்டி மத்தியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து அந்தப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 25 குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் பெ.கனகசபாபதி, வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான லயன் செ.விஜயராஜ், க.மயூரதன், சே.கலையமுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.