காரைதீவில் தெரிவு செய்யப்பட பல குடும்பங்களுக்கு காரைதீவு விளையாட்டு கழகத்தினரினால் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பு…

கொரோனாவின் காரணமாக இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் குடும்பங்களில் உணவுத் தேவை மேலும் அதிகரித்துள்ளது.

இதன் தாக்கத்தினை குறைக்கும் முகமாக காரைதீவு விளையாட்டுக்கழகத்தினரினால் காரைதீவு பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட பல குடும்பங்களுக்கு இன்றைய தினம் பயனாளர்களின் வீடுவீடாக சென்று உலர் உணவு நிவாரணப்பொதிகள் வழங்கி வைத்தனர்.

இன் நிகழ்வில் காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள், உறுப்பினர்கள் என்பவர்கள் கலந்து சிறப்பித்து இருந்தனர். மக்கள் காரைதீவு விளையாட்டுக்கழகத்தினருக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.