கைது எண்ணிக்கை 16 ஆயிரத்து 892 ஆக உயர்வு!

டளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 16 ஆயிரத்து 892 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 4 ஆயிரத்து 313 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இன்று நண்பகல் 12 மணி முதல் இன்று மாலை 6 மணி வரையான  06 மணித்தியால காலப்பகுதியில் மட்டும் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 768 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 249 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.