ஊரடங்கு உத்தரவை மீறிய 23,500 பேர் கைது

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 23,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 6,500 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு , கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், கண்டி ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 06 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.