மேலும் ஒருவர் குணமடைவு! இதுவரை 55 பேர் வீட்டுக்கு!! * 137 பேர் சிகிச்சையில் * 165 பேர் கண்காணிப்பில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தொற்றுக்குள்ளாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 54 இலிருந்து 55 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 199 ஆகக் காணப்படுகின்றது. அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய 137 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 165 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.