330 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று …
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுக்குள்ளாகியவர்களில் இன்று மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 218 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை