கிழக்கு மாகாண ஆளுநரின் புதிய செயலாளராக எல்.பி.மதநாயக்க நியமனம்!

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் புதிய செயலாளராக எல்.பி.மதநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், அநுராதபுரம் – ஹொரவப்பத்தானவின் உதவிச் செயலாளராகவும், அநுராதபுரத்தின் கூடுதல் அரசாங்க முகவராகவும், மாத்தளை மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், பேராதெனிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலை பட்டமும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தில் இளங்கலை பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.