சீரற்ற வானிலை – ஆயிரத்து 433 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்றைய தினம்(திங்கட்கிழமை) மாத்திரம் 436 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலேயே நேற்றைய தினம் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் 178 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 253 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 425 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

அத்துடன், வட மாகாகணத்தின் முல்லைதீவு மாவட்டத்தில் எட்டு பேரும், வவுனியா மாவட்டத்தில் 37 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 95 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.