புளியந்தீவு தெற்கு வட்டார மாநரசபைப் பாதீட்டு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புளியந்தீவு தெற்கு 18ம் வட்டாரத்தின் 2020ம் ஆண்டுக்கான பாதீட்டு வேலைத்திட்டங்களின் ஒரு பகுதி வேலைத்திட்டம் இன்றைய தினம் (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகரமுதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், ச.கமலரூபன், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பொறியியலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உட்பட பகுதி பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

புளியந்தீவு தெற்கு வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களினால் 2020ம் ஆண்டுக்குரிய பாதீட்டு வேலைத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட செயற்திட்டங்களுள் வாவிக்கரை வீதி 01ல் அமைந்துள்ள குறுக்கு வீதி புனரமைக்கும் பணிகள் இன்று முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன்படி மேற்படி வீதி கொங்கிறீற்றிடல் செயற்பாடு வட்டார உறுப்பினர் உட்பட மாநகரசபைப் பிரதிநிதிகளினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.