கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ரிஸ்லி முஸ்தபா நியமனம்.
(எம்.என்.எம்.அப்ராஸ்)
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக கடந்த நாடளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட றிஸ்லி முஸ்தபா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவருக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தினை கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜஹம்பத் அவர்கள் இன்று (17) ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வழங்கிவைத்தார்கள்.
இவர் முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மாயோன் முஸ்தபா அவர்களின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது .
கருத்துக்களேதுமில்லை