கிளிநொச்சியில் ஐவருக்கு தொற்று உறுதியானது

யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 71 பேருக்கு Covid-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகளில் கிளிநொச்சியில் ஐவருக்கும் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த ஏழு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனையில் கிளிநொச்சிதொண்டமான்நகரில் தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபடும் ஒரே விற்பனை நிலையத்தை சேர்ந்த மூவருக்கும் குறித்த விற்பனை நிலையத்தின் அருகில் இருக்கின்ற மற்றுமொரு விற்பனை நிலையத்தில் தொழில் புரியும்  ஊழியர் ஒருவருக்கும் மேலும் அருகிலுள்ள விற்பனை நிலையத்தில் கடமை புரிந்து கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் உறவினருக்கும்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் 7 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.