வவுனியா கொக்குவெளி இளைஞர்களின் கோரிக்கைக்கு அமைவாக மைதானத்திற்கான இடம் ஒதுக்கீடு

வவுனியா, கொக்குவெளிப் பகுதியில் உள்ள இளைஞர்கள் தமது பகுதியில் விளையாட்டு மைதானம் இல்லை என வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய மாவட்ட அபிவிவிருத்திக் குழுத் தலைவர் இன்று (26.11) கொக்குவெளி பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள இளைஞர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, மைதானம் அமைப்பதற்காக இளைஞர்களால் அடையாளப்படுத்தப்பட்ட அரச காணியைப் பெற்றுக் கொடுத்ததுடன், குறித்த காணியை கரப்பந்தாட்ட மைதானத்திற்கு ஏற்ற வகையிலும்  புனரமைத்தும் கொடுத்துள்ளார். இதன் மூலம் அப்பகுதி இளைஞர்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.