திருமலையில் இளைஞரொருவரின் கையை வெட்டி காயப்படுத்திய அண்ணன் -தம்பிக்கு ஒரு வருட கடூழிய சிறை

திருகோணமலை-சீனக்குடா  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞரொருவரின் கையை வெட்டி பாரதூரமான காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அண்ணன் மற்றும் தம்பிக்கு ஒரு வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் ரந்திக லக்மால் ஜெயலத் இன்று (26) கட்டளையைப் பிறப்பித்தார்.
திருகோணமலை-சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ஆர்.பீ. ஜகத் குமார (35 வயது) மற்றும் ஆர்.பீ.பிரதீப் குமார (32வயது)  என்பவருக்கு இக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு திருகோணமலை மரத்தடி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இளைஞர் ஒருவரின் கையை வெட்டி  பாரதூரமான காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பாதிக்கப்பட்ட நபருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் நஷ்டஈடு வழங்குமாறும் ஒருவருக்கு  1500 ரூபாய் வீதம் தண்டப் பணம் செலுத்துமாறும் நீதவான் கட்டளையிட்டார்.
(பதுர்தீன் சியானா)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.