இலங்கையில் கொரோனா மரணம் 109 ஆக உயர்வு! – மேலும் 487 தொற்றாளர்கள் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

கொழும்பு – 02 ஐச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு – 08 ஐச் சேர்ந்த 96 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இன்றும் 487 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரை 19 ஆயிரத்து 447 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இதையடுத்து மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 656 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 223 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.