கல்முனை பொலிசாரினால் கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கை
கல்முனை பொலிசாரினால் கோவிட்- 19 தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக ” மீற்றரான வாழ்க்கை” எனும் தொனியிலான ஸ்டிக்கர்கள்
முச்சக்கரவண்டிகளுக்கு கல்முனை போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் இன்று காலை (03) ஒட்டப்பட்டன.
குறித்த நிகழ்வானது கல்முனை பிரதான பொலிஸ் பொறுப்பாதிகாரி சுஜித் பிரியந்த தலைமையில் கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பாதிகாரி பி.நிஹால் சிறிவர்தனவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது .இதன் போது பிரதான பொலில் பரிசோதகர்களா ன ஏ.பி இந்திக உதயவர்தன,ஏ.எல் . ஏ .வாஹிட் மற்றும் போக்குவரத்து பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டு முச்சக்கரவண்டிகளுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்தனர்.
இந் நிகழ்வுகள் சுகாதார நடை முறைக்கமைவாக இவ் நிகழ்வு இடம்பெற்றதுமை குறிப்பிடத்தக்கது .
(எம் .என். எம் .அப்ராஸ்)
கருத்துக்களேதுமில்லை