யாழில் இருந்து காரில் மட்டக்களப்பிற்கு கேரளா கஞ்சா கடத்திய இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு காரில் கேரளகஞ்சா கடத்திய இருவரை மட்டக்களப்பில் வைத்து இன்று வியாழைக்கிழமை (03) அதிகாலை கைது செய்ததுடன்,
2 கிலோ 200 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி ஜே.எஸ்.ஏ. ஜெயசிங்க தெரிவித்தார்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்; ஒன்றின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி ஜே.எஸ்.ஏ. ஜெயசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர்,
சம்பவதினமான இன்று வியாழக்கிழமை அதிகாலை மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் வைத்து குறித்த காரை மடக்கிபிடித்து சோனையில் காரிர் சூட்சகமாக மறைத்துவைக்கப்பட்ட நிலையில்; 2 கிலோ 200 கிராம் கொண்ட கேரளாகஞ்சாவையும் கார் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கஞ்சா வியாபாரத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.