இன்றைய தினமே நாடாளுமன்றத்தில் எனது கடைசி நாள் – ரஞ்சன் ராமநாயக்க

நாடாளுமன்றத்தில் எனது கடைசி நாளாக இருக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று (05)சனிக்கிழமை, துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் இடம்பெற்ற வேளையில் உரையாற்ற ஆரம்பித்த எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக இதனை தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்க மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்த மாதம் 8 ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளது, மேலும் விசாரணை முடிவடைந்த நிலையில், விரைவில் தீர்ப்பு வாரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில் “எனது வழக்கு 8 ஆம் தேதி, நான் சிறைக்குச் செல்லப் போகிறேன், தயவுசெய்து என்னை பேச அனுமதிக்கவும்” என ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய(05) நாடாளுமன்ற அமர்வில் கூறினார்.இவர் உரையாற்றும்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் குறுக்கீடு செய்து அவரது உரையை குழப்ப ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.