இலங்கையர்களுக்கு கொரிய தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு தூதுவரிடம் கோரிக்கை
இலங்கையர்களுக்காக கொரிய குடியரசில் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்குமாறு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இலங்கைக்கான கொரிய தூதுவர் வுன் ஜின் பியோங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இலங்கையின் இளையோர் சமுகத்திற்கு தொழில் வாய்ப்பை வழங்குகின்றமை குறித்து அமைச்சர் கொரியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
கொவிட் தொற்று காரணமாக தற்போது கொரியாவில் தொழில் வழங்கும் நடவடிக்கை தற்காலியமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் ஆரம்பிக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
கருத்துக்களேதுமில்லை