சுதந்திர தினத்தை முன்னிட்டு 146 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னிப்பின் கீழ் இன்றைய(04) தினம் 146 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ அறிவித்த பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.விடுதலை செய்யப்பட்டுள்ள கைதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும் உடனடியாக அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்ளென்றும் சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.