வாக்குமூலம் வழங்குவதற்காக ராஜித மற்றும் சத்துர சி.சி.டியில் ஆஜர் ஆஜர்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன மற்றும் அவரது மகனான, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனரத்ன ஆகிய இருவரும் வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் (சி.சி.டி) ஆஜராகியுள்ளனர்.

தன்னை கடத்திச் சென்று தாக்குதலுக்கு உட்படுத்தியாக ஊடகவியலாளர் ஒருவர் வழங்கிய முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர்கள் இவ்வாறு ஆஜராகியுள்ளனர்.

ஊடகவியலாளரின் அந்த முறைப்பாடு போலியானது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.