வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளராக அன்னமலர்

வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி. அன்னமலர் சுரேந்திரன் அவர்கள் நேற்று (05) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இது வரை வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளராக கடமையாற்றிய முத்து இராதாகிருஸ்ணன் யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில், வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக செயற்பட்ட திருமதி அன்னமலர் சுரேந்திரன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று (05.05) உத்தியோக பூர்வமாக வவுனியா தெற்கு வலயத்தில் தனது கடமைகனைள பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதேவேளை, கடந்த நான்கு வருடங்களாக வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிய இவர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.