பிரதான செய்திகள்

ஓடிக்கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர் இருக்கையில் இறப்பு 

நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற நாவலப்பிட்டி  இலங்கை போக்குவரது சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி சாரதி ஆசனத்தில் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்ததாகவும், பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் லிதுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி லங்காம டிப்போவில் பணியாற்றிய சுரங்க அருணசிறி அத்தநாயக்க ...

மேலும்..

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 39ம் ஆண்டு நினைவேந்தல்

குமுதினி படுகொலையின் 39ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் (மே15) காலை முதல் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. காலை 9.30 மணிக்கு மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் முதன்மை நினைவுச் சுடரினை 7 மாத பச்சிளம் குழந்தையை பறிகொடுத்து தானும் படுகாயம் ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அவரின் செயலாளர் ஆகியோருடன் கல்முனையிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தலைமையிலான குழுவினர் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த சந்திப்பானது நேற்று (14)ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கல்முனை வடக்கு ...

மேலும்..

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல் .

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜை சக்தி அமைப்பு இன்று  காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. போராட்டம் தொடங்கியதும் பொலிஸார் பதாதைகளை அகற்றியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ...

மேலும்..

கொரோனா தடுப்பூசி குறித்து அச்சம் தேவையில்லை

கொரோனா காலப் பகுதியில் அஸ்ட்ராசெனிகா (AstraZeneca) தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி பக்க விளைவுகளை ...

மேலும்..

காரைதீவில் முன்னாள் தவிசாளர் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை அனுஸ்டிக்கும் பொருட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் செயற்பாடு காரைதீவில் இன்று காலை இடம்பெற்றது. காரைதீவு பிரதேச சபை  முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு காரைதீவு சந்தை ...

மேலும்..

ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட்டது.

கொரோனா காலப்பகுதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் தற்காலிக இராணுவ சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்புச் ...

மேலும்..

க.பொ.த தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய முதியவர்

தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 80 வயது முதியவர் ஒருவர் கணித பாடத்தில் தோற்றியுள்ளமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. பாணந்துறை - கிரிபெரிய பிரதேசத்தைச் சேர்ந்த நிமல் சில்வா என்ற முதியவரே  இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். இவர் ஒரு ...

மேலும்..

பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களுக்கு தடை உத்தரவு

கல்முனை பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்பவத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ...

மேலும்..

தீவக பாடசாலையில் மின்சார சிக்கல் – சட்டென தொலைபேசியை துண்டித்த வலய கல்வி பணிப்பாளர்.

தீவக பாடசாலையில் ஏழு மாதங்களாக மின்சாரம் இல்லை. ஏன் என வலய கல்வி பணிப்பாளரிடம் தொலைபேசிஊடக வினவியபோது தொலைபேசியை துண்டித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ் தீவக வலயத்திற்கு உற்பட்ட பாடசாலை ஒன்றின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்த நிலையிலும் மின்சார ...

மேலும்..

தாமரைக் கோபுரத்தில் சாகசம் புரிந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு தாமரைக் கோபுரத்தில் பராசூட் சாகசத்தின் போது வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று மதியம் அவர் தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாய்ந்த போது அவரது பராசூட்டை திறப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த வெளிநாட்டவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ...

மேலும்..

குழந்தையின் உயிரை பறித்த கரட்

அநுராதபுரம் – சாலியவெவ பகுதியில் கரட் தொண்டையில் சிக்குண்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தையின் தாய், சமைப்பதற்காக கரட்டை துண்டுகளாக வெட்டி மேசை மீது வைத்துள்ள நிலையில் மேசையிலிருந்த கரட் துண்டொன்றை குறித்த குழந்தை உட்கொண்டுள்ளது. கரட் துண்டு குழந்தையின் ...

மேலும்..

சமூக மாற்றமே வீதி விபத்துக்களை தடுக்கும் – உதவிப் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ்

வீதி விபத்துக்களை தடுப்பதற்கு தனி மனித மாற்றம் அன்றி சமூக மாற்றமே அவசியம் என வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள உதவி பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் தெரிவித்தார். யாழ் நகரப் பகுதியில் இடம்பெற்ற வீதி போக்குவரத்து ஒழுங்கு விதிகள் தொடர்பான நடைபவணியில் ...

மேலும்..

யாழில் நூற்றாண்டு கடந்த வேம்பு திருச்சபையினால் அழிப்பு – அதிகாரிகள் மொளம்

நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகளும், யாழ்ப்பாண ஆதீனமும் மெளனம் காத்துள்ளது. யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன வளாகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காணியில் அமெரிக்கன் மிசனரிகள் காலத்தில் ...

மேலும்..

யாழ் – சாட்டியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, நேற்றைய ...

மேலும்..