பிரதான செய்திகள்

அரச அதிகாரிகளின் விடுமுறை குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை

கொரோனா தொற்றுநோயின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான சுற்றறிக்கையை ...

மேலும்..

மனித கடத்தல் குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ மேஜர் கைது

இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவத்தினரை ரஷ்ய யுக்ரைனில் இடம்பெறும் யுத்தத்திற்கு அனுப்பிய குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மனித கடத்தலில் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் இராணுவ சார்ஜன்ட் ஒருவருமே இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ...

மேலும்..

அவசரமாக தரையிறக்கப்பட்டு விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, முன்பகுதி தரையுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. பெட்எக்ஸ் (FedEx) எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் - 767 என்ற விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லையெனவும், ...

மேலும்..

மைத்திரிக்கான தடை மேலும் நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று கொழும்பு ...

மேலும்..

பல குற்றச்செயல்களில் சிக்கப்போகும் கஞ்சா புகழ் டயானா

இலங்கை பிரஜாவுரிமை வைத்திருந்ததாக தவறான தகவலை கூறியமை, விசா அனுமதியில்லாமல் நாட்டில் தங்கியிருந்தமை, தவறான தகவல்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டமை உட்பட்ட காரணங்களை முன்வைத்து முன்னாள் எம்.பி டயானா கமகேவை கைது செய்வதற்கான ஆலோசனைகள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டயானா ...

மேலும்..

மே 21 முதல் கனடா கவுர்மென்ட் வழங்கும் சூப்பர் விசா

கனடாவில் வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கு மே மாதம் 21ஆம் திகதி முதல், கனடா சூப்பர் விசா (Super Visa) ஒன்றை இவர்களுக்காக வழங்க தயாராகிவருகிறது. ஸ்பான்சர் செய்தவர்களுக்கு 2020 ஆம் ஆண்டில் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவருவதற்காக ...

மேலும்..

பிஜி நாட்டின் உயர் நீதிமன்ற நீதியரசராக இலங்கையர்

பிஜி நாட்டின் உயர் நீதிமன்ற பதில் நீதியரசராக அம்பாறை மாவட்டம் இறக்காமத்தைச் பிறப்பிடமாக கொண்ட மொஹமட் அஸ்ஹர் உமரு லெப்பே(Mohammed Azhar Umaru Lebbe) பதவியேற்றுள்ளார். பிஜியின் நீதித்துறை மாநில மாளிகையில் அவர் நேற்று (08.05.2024) பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிஜி குடியரசுத் மற்றும் நிதி ...

மேலும்..

மாகாண மட்டங்களில் வைத்தியசாலை தொழிற்சங்க நடவடிக்கை

தமது கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்று  முதல் மாகாண மட்டத்தில் வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை வடமத்திய மாகாணத்தில் உள்ள ...

மேலும்..

பாஸ்மதி அரிசிக்கு மாற்றீடான அரிசி வகை கண்டுபிடிப்பு

பாஸ்மதி அரிசிக்கு மாற்றீடாக 2 மாற்று நெல் வகைகளை பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் கண்டறிந்துள்ளது. ஏ.ரி 306 மற்றும் ஏ.ரி 309 ஆகிய இந்த நெல் வகைகள் பாஸ்மதி அரிசியைப் போன்று நீளமானவை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது ...

மேலும்..

ஐ.பி.எல் போட்டியில் யாழ்ப்பாண வீரர் வியாஸ்காந்த்

ஐ.பி.எல் போட்டிகளில் இன்று லக்னோ அணிக்கெதிரான தீர்க்கமான போட்டியில் யாழ்ப்பாண வீரர் விஜயகாந் வியாஸ்காந்த் அறிமுகமாகியுள்ளார் .

மேலும்..

பசு கொள்ளையர்களுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம் – உதவிய இளைஞர்களுக்கு பாராட்டு

புங்குடுதீவில் மோட்டார்சைக்கிளில் பசுவொன்றினை இறைச்சியாக்கும் நோக்கில் கடத்திச்சென்ற இருநபர்கள் நேற்றைய தினம் ஊர்காவற்துறை பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் . தலா 25000 ரூபாய் அபராதத்துடன் கடுமையான எச்சரிக்கையோடு இரு நபர்களும் விடுவிக்கப்பட்டதோடு இக்குற்றச்செயலை காணொளியாக எடுத்து பொலிசாருக்கு ...

மேலும்..

அவசரமாக அழைக்கப்பட்ட அரச அதிகாரிகள்

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதானி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தில் ...

மேலும்..

ஹிருணிகாவிற்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை இரு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஹிருணிகா ...

மேலும்..

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்திய இராணுவ தளபதி

தமக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான காணொளிகளைப் பகிர்ந்தமைக்காக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ,தனிநபர் ஒருவருக்கும் இரு அமெரிக்க நிறுவனங்களுக்கும் எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின் ...

மேலும்..

செயற்கை கால்,கைகள் தயாரிக்கும் திட்டம் இலங்கையில் ஆரம்பம்

இந்தியாவின் உதவியுடன் செயற்கை கால் மற்றும் கைகளைத் தயாரிக்கும் திட்டம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும் இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான செயலமர்வு அண்மையில் ராகமையிலுள்ள இராணுவ புனர்வாழ்வு நிலையத்தில் ஆரம்பமானது.இந்த செயலமர்வு இம்மாதம் 23ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இதற்காக ...

மேலும்..