பிரதான செய்திகள்

சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்பட்ட மாடுகள் மீட்பு

யாழ் - நெடுந்தீவில் சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்பட்டு மாடுகள் மீட்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று ஒரே நாளில் இரண்டாவது இடத்தில் மாடுகள் மீட்கப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இருந்து முறைகேடாக மாடுகள் கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து ...

மேலும்..

நெடுந்தீவில் இலங்கை சமுத்திரவியல் பல்கலைகழகத்தின் நீச்சல் பயிற்சிநெறி 

நெடுந்தீவு பிரதேச இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி இலங்கை சமுத்திரவியல் பல்கலைகழகத்தின் நீச்சல் பயிற்சிநெறியினை நெடுந்தீவு பிரதேசத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பயிற்சி 18 நாட்களை கொண்டதாக உள்ளதுடன் இதன்போது பங்குபற்ற விரும்புவர்கள் தமது விபரங்களை எதிர்வரும் மே 06 திகதிக்கு ...

மேலும்..

கல்முனையில் பெண்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்க்குட்பட்ட பெண்களுக்கு தலைமைத்துவ பயிற்சி ஒன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இன்று இடம்பெற்றது. தேசிய இனங்களுக்கிடையிலான நட்பு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த தலைமைத்துவ பயிற்சி பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் முரசொலிமாறன் ...

மேலும்..

பொது மன்னிப்பில் விடுதலையான 44 இலங்கையர்கள்

வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை வழங்கப்பட்டுள்ளது. புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு, அரச உத்தரவின் பேரில் குறித்த இலங்கையர்கள் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அபுதாபியில் உள்ள இலங்கைத் ...

மேலும்..

பொலிஸ் பொறுப்பதிகாரி மீது தாக்குதல்

பதியத்தலாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தாக்குதல் ஒன்றில் காயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண் ஒருவருடன் திருமணத்துக்கு அப்பாலான தொடர்பினை கொண்டிருந்தமையினால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் ...

மேலும்..

ஈரானிய ஜனாதிபதியின் உரைக்கு எதிர்ப்பு வெளியிட்ட முஸ்லிம் பெண்கள் அமைப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஈரானிய ஜனாதிபதி செயிட் இப்ராஹிம் ரைசி கொழும்பிலுள்ள முன்னணி பள்ளிவாசலில் உரையாற்றியபோது வெளியிட்டதாக கூறப்படும் வெறுக்கத்தக்க வார்த்தைப் பிரயோகம் குறித்து மனித உரிமைகள் ஆர்வலரான பெண் ஒருவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கை-அமெரிக்க முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை மற்றும் ...

மேலும்..

வெப்பத்தில் வெடித்து சிதறிய கைதொலைபேசி

ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது. சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிக வெப்பத்தால் குறித்த தீ பிடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

மேலும்..

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய் மூலம் எண்ணெய் – திட்டம் விரைவில்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலமாக எண்ணெய் வழங்கும் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து இன்று திருகோணமலை ...

மேலும்..

அவசரமாக அவுஸ்திரேலியாவில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசர மருத்துவ உதவி காரணமாக ஆஸ்திரியாவின் வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. தரையிறங்கிய விமானம் மீண்டும் பயணிப்பதில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளது. தனது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ...

மேலும்..

ஒலிபெருக்கிகள் சத்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

வவுனியா மாவட்டத்தில் க. பொ. த சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய வழிபாட்டுத் தளங்களிலும், பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாக சுகாதார பிரிவினர், நகரசபை, பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகம் ...

மேலும்..

புங்குடுதீவில் 60 மின்விளக்குகள் பொருத்தப்பட்டது

புங்குடுதீவில் 60 வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இருள் சூழ்ந்து காணப்பட்டிருந்த வீதிகளில் வேலணை மின்சார சபையினரால் 60 மின் விளக்குகள் பொருத்தப்பட்டன . அத்துடன் ஏற்கனவே கடந்தகாலங்களில் பொருத்தப்பட்டு பழுதடைந்து காணப்பட்டிருந்த முப்பது மின்விளக்குகளும் ...

மேலும்..

ஏறாவூரில் மர்மமாக மரணித்த சடலம் மீட்பு

ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் ...

மேலும்..

போலி வைத்தியர்கள் தொடர்பில் பொலிசாரின் அதிரடி நடவடிக்கை

போலி உரிமம் மற்றும் சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் தகுதியற்ற வைத்தியர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ...

மேலும்..

மனைவியை தக்க முற்பட்ட நபர் பொலிசாரின் துப்பாக்கிசூட்டில் காயம்

வாத்துவை - மொல்லிகொட பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது. கண்ணாடி போத்தலால் மனைவியின் கழுத்தை அறுத்து பலத்த காயப்படுத்திய நபரை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக வாத்துவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் துப்பாக்கிச் ...

மேலும்..

ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்றும் முன்னெடுப்பு

ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாடுகளை இன்றைய தினமும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. க. பொ. த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய பத்தரமுல்லையில் உள்ள தலைமை காரியாலயமும், மட்டக்களப்பு, வவுனியா, நுவரெலியா, காலி ...

மேலும்..