இலங்கை செய்திகள்

தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம்

தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 29 வயதுடைய பெண்ணொருவரே நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,  கடந்த மாதம் 8 ஆம் திகதி, வவுனியா-  ரம்பவெட்டி பகுதியில் வசித்து வந்த ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 883 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 879 பேர் குணமடைந்திருந்த நிலையில், மேலும் 04 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ...

மேலும்..

ஆயுத விவகாரம்: விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை

ஆயுதங்கள் கொண்டுச் சென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிரேஸ்ட்ட சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 2003-03-14ஆம் திகதி, மட்டக்களப்பு- கல்லடி பாலத்திலுள்ள ...

மேலும்..

தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு

தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 29 ஆம் திகதியே திடீர் ...

மேலும்..

சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக மைத்திரி அறிவிப்பு

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ...

மேலும்..

பஹ்ரேனில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

பஹ்ரேன் நாட்டில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.202 ரக விமானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் டுபாயில் இருந்து 2 இலங்கையர்கள், எமிரேட்ஸ் விமானசேவைக்கு சொந்தமான ...

மேலும்..

ராஜித, ரஞ்சித், ரஞ்சன் உட்பட ஏழு பேருக்கு அழைப்பாணை…

ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்தும பண்டார, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட கடந்த அரசின் அமைச்சர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. வடமேல் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டி.கே.பி. திஸாநாயக்கவால் ...

மேலும்..

வன்னியில் தயவுசெய்து இனவாதம் கக்காதீர்கள் – சக வேட்பாளர்களிடம் காதர் மஸ்தான் கோரிக்கை…

"தேர்தல் காலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இனவாதம் கக்கபடுகின்றது. வன்னி மாவட்டத்தில் தயவுசெய்து இனவாதத்தைக் கக்க வேண்டாம்." - இவ்வாறு கோரிக்கை விடுத்தார் முன்னாள் பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான காதர் மஸ்தான் தெரிவித்தார். வவுனியாவில் இன்று நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் ...

மேலும்..

தமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார் சிறீதரன்

தமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு ...

மேலும்..

ரிஷாத், ஹக்கீமுடன் நானும் கட்டாயம் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாட்டில் அமீர் அலி உரை 

"புதிய நாடாளுமன்றத்தில் கட்சி, கொள்கைக்கு அப்பால் அனுபவமும் ஆளுமையும் கொண்ட நல்ல அரசியல் தலைவர்கள் இருக்க வேண்டும். அந்தவகையில் கண்டியிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும், வன்னியிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனும், மட்டக்களப்பு ...

மேலும்..

தற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்

தற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எனவே, இந்த நாட்டில் புதிய ஆரம்பம், புதிய ஆட்சி முறை, புதிய சிந்தனையாளர்களே தேவை ...

மேலும்..

வெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்

கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் களத்தில் நிற்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ...

மேலும்..

அரசியல் தீர்வுக்கான முயற்சிகளுக்குச் சமாந்திரமாக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் செயற்படுவோம்! வடமராட்சி கிழக்குப் பரப்புரைக் கூட்டத்தில் சுமந்திரன் விளக்கம்

56 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் சமஷ்டித் தீர்வுக்கும் 77 இல் தனிநாட்டிற்காகவும் வாக்களித்து வந்தார்கள். இதனடிப்படையில் சமஷ்டி என்பது எமது மக்களின் நீண்ட கால ஜனநாயகத் தீர்ப்பாகும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் ...

மேலும்..

திருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்! தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம்; தலைவர் சம்பந்தன் அறைகூவல்

"திருகோணமலை தமிழர்களுக்குச் சொந்த மண் என்பதை இம்முறை பொதுத்தேர்தலில் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். திருகோணமலையிலுள்ள அவரது வீட்டில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் ...

மேலும்..