இலங்கை செய்திகள்

எனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான சட்சியம்- ரிப்கான் பதியுதீன்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பயங்கரவாதி சஹ்ரான், கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு 2018இல் உதவியதாக தன்னைத் தொடர்புபடுத்தி, புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளமை உண்மைக்குப் புறம்பானது என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். தடுப்புக் ...

மேலும்..

மாலைதீவில் சிக்கியிருந்த 169 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கியிருந்த 169 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். குறித்த அனைவரும் மத்தளை மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, பரிசோதனை அறிக்கைகள் வெளிவரும் வரையில் ...

மேலும்..

கருணா குறித்து பேசுபவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியவர்களை மறந்துவிட்டனர் – மஹிந்த

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினை அரசியலாக்கும் எதிர்தரப்பினர், விடுதலைப் புலிகளுக்கு யார், ஆயுதம் வழங்கியது என்பதை மறந்து விட்டார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு, கருணாவின் வரலாறு ஒன்றும் இரகசியமல்ல, அனைவருக்கும் ...

மேலும்..

கூட்டமைப்பை விட்டு வெளியேறியோரை மீண்டும் இணைய அழைக்கிறார் மாவை!

துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவேண்டும் ...

மேலும்..

சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்படாமை – தேர்தல்கள் ஆணைக்குழு அதிருப்தி

பொது தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அதிருப்தி வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமையினால், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பெரும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

மேலும்..

மன்னாரில் இருந்து 2,500 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றம்!

மன்னாரில் இருந்து 2 ஆயிரத்து 500 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார். புத்தளம் மாவட்டத்தில் நிரந்தர வதிவிடங்களைக் கொண்டவர்களின் பெயர்கள் மன்னாரில் இருந்த புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது ...

மேலும்..

தற்போது நாட்டில் பழிவாங்கும் படலம் தீவிரமடைந்துள்ளது -ரிசாட் பதியுதீன்

புதிய புதிய குற்றச்சாட்டுக்களை பேரினவாதம் எங்கள் மீது சுமத்தி  பழிவாங்கும் படலத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்  தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற   கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் ...

மேலும்..

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்தது

இலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நேற்று மாத்திரம் 1232 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மொத்த பி.சிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 98634 ஆக இருந்தது. இந்நிலையில் இன்றைய நிலைவரப்படி, பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை ...

மேலும்..

யாழில். நட்சத்திர விடுதி அமைக்க முற்பட்டவருக்கு விளக்கமறியல்!

அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி அமைக்க தெரிவு செய்யப்பட்ட இடத்தில் முற்காலத்தில் அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டகள் உள்ளன  இடத்தில் அனுமதி கோரியவருக்கு எதிராக தொல்பொருள் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் ...

மேலும்..

யாழில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் பிரதேசங்களில் அதிகாலை வேளைகளில் வீதியில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை அறுக்கும் பொம்மைவெளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 3 பெண்களிடம் அறுக்கப்பட்ட சுமார் 6 பவுண் எடையுடைய தங்கச் ...

மேலும்..

பிரித்தானியாவல் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 154 பேர் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவல் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 154 பேர் தாயகம் திரும்பியுள்ளனர் விசேட விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (புதன்கிழமை) இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதனையடுத்து விமான நிலையத்தில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விமான ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது. இந்த தொற்றிலிருந்து இன்று (புதன்கிழமை) மேலும் 14 பேர் குணமடைந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம் வைரஸ் ...

மேலும்..

ஆட்டநிர்ணய சதி குறித்து முக்கிய ஆதாரம் – மஹிந்தானந்த வாக்குமூலம்

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றது என்பதற்கான ஆவணங்களை பொலிஸாரிடம் கையளித்துள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக்கிண்ணப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போது ...

மேலும்..

வில்பத்து விவகாரம் – ரிஷாட்டிற்கு எதிரான மனு குறித்து 31ஆம் திகதி தீர்ப்பு

வில்பத்து காடழிப்பு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ...

மேலும்..

இராணுவ மயப்படுத்தலை அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் – துரைராசசிங்கம்

ஜனாதிபதி இந்த நாட்டில் சிங்கள பௌத்த தேசிய வாதத்தை   பரப்ப முற்படுவது நல்லிணக்கத்தை ஏற்படுத்த மாட்டாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை   துரைராசசிங்கம்   தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஜனநாயகத்தைப் பேணுவதுடன் நிருவாகத்துறைகள் இராணுவ மயமாக்கலை ...

மேலும்..