இலங்கை செய்திகள்

அரசியல் ஸ்தீரத் தன்மையை வரிக்கொள்கை பலவீனமாக்கும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டு

2023 ஆண்டை காட்டிலும் 2024 ஆம் ஆண்டு பிரச்சினைகள் தீவிரமடையும். அரசாங்கத்தில் வரி கொள்கை அரசியல் ஸ்தீரத்தை பலவீனப்படுத்தும். மக்கள் போராட்டங்கள் தலைதூக்கும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை ...

மேலும்..

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக 51,967 மி.ரூபா செலவிடப்பட்டுள்ளது! நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கமைய பயனாளர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நிறைவமைந்த ஐந்து மாதகாலப்பகுதியில் மாத்திரம் 51,967 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பம் அடுத்தமாதம் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு - அஸ்வெசும ...

மேலும்..

போதைப்பொருள் குறித்த 4665 பிரதான சந்தேகநபர்களின் பெயர்ப்பட்டியல் புலனாய்வுப்பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது டிரான் அலஸ்  தகவல்

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 4665 பிரதான சந்தேகநபர்களின் பெயர்ப்பட்டியல் புலனாய்வுப்பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் கடந்த 4 நாள்களில் 731 சந்தேகநபர்களும், பெயர் பட்டியலில் இல்லாத 8458 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். இந்த சுற்றிவளைப்புக்களில் ...

மேலும்..

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும் புதிய தலைவர் தெரிவும் திட்டமிட்டபடி இடம்பெறும் அறுதியிட்டுக் கூறுகிறார் சீ.வி.கே. சிவஞானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும், புதிய தலைவர் தெரிவும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கட்சியின் சிரேஷ்ட தலைவரும், வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு ...

மேலும்..

பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாள்களில் 8 ஆயிரம் பேர் கைது! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்து

குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் நாள் சுற்றிவளைப்புகளில் 2,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்புகளில் 8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் இதன்போது போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சொந்தமான 92 ...

மேலும்..

அழுகிய விதை உருளைக்கிழங்கு யாழ். விவசாயிகளுக்கு வழங்கல்! அங்கஜன் ஜனாதிபதிக்குக் கடிதம்

யாழ்ப்பாண விவசாயிகளுக்கு வழங்கவென கொண்டுவரப்பட்ட 21 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்குகள் அழுகிய நிலையில் காணப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணையும், விவசாயிகளுக்கான நஸ்டஈடும் அவசியம் எனத் தெரிவித்து ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் கடிதமொன்றை எழுதியுள்ளார். இக்கடிதத்தில், யாழ்ப்பாணத்தில் 2023ஃ24 பெரும்போகத்தில் விதைப்பதற்குத் தேவையான ...

மேலும்..

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு

'எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக' பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் - மேற்படி பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக பதில் பொலிஸ் மா ...

மேலும்..

வெள்ளம் பாதித்த மக்களுக்கு அத்தியாவசிய பொருளுதவிகள்! நாவற்குழி பிரதேசத்தில்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் யாழ்.மாவட்டத்தில்  வெள்ள அனர்த்தத்திhல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடாவில் வசித்தாலும் எமது தாயக மக்களிற்கு கடந்த பத்து வருடங்களிற்கும் மேலாக பற்பல சமூகப்பனிகளையும் வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு நிவாரண உதவிகளையும் செய்து வரும் ஒரு முதன்மை ...

மேலும்..

இறந்த உடலுக்கு ஒட்சிசன் கொடுக்கின்றார் ஜனாதிபதி! சபா.குகதாஸ் சாட்டை

  ஜனாதிபதியின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் இலங்கையைப் பொறுத்தவரை இறந்த உடலுக்கு ஒட்சிசன் கொடுக்கும் செயற்பாடு என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். உண்மையில் ஜனாதிபதி கூறிய மூலோபாய திட்டங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கானது அல்ல என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார். மேலும் இவை ...

மேலும்..

ஜனாதிபதி விக்ரமசிங்க வெற்றிபெறவே மாட்டார்! அடித்துக்கூறுகிறார் உதயங்க வீரதுங்க

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற மாட்டார் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எஸ்டோனியாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானம் ...

மேலும்..

சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையம் வெள்ளம் பாதித்த மக்களுக்கு இரவு உணவு!

வெள்ள அனர்த்தம் காரணமாக தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி ஐந்து வீட்டுத்திட்டப் பகுதி மற்றும் சாவகச்சேரி மகிழங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த 50 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில் அவர்களுக்கான புதன்கிழமை இரவு நேர உணவை சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையம் வழங்கி ...

மேலும்..

மிருசுவில் படுகொலை நினைவு அனுஷ்டிப்பு!

  தென்மராட்சி-மிருசுவில் பகுதியில் கடந்த 2000 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எட்டு பொதுமக்களுடைய 23 ஆவது நினைவு தினம் புதன்கிழமை மிருசுவில் பகுதியில் அனுஸ்டிக்கப்பட்டது. சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் செ.மயூரனின் ஏற்பாட்டில் மேற்படி நினைவேந்தல் மற்றும் படுகொலை செய்யப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ...

மேலும்..

உரிய சுற்று நிரூபங்களின் அடிப்படையில் அதிபர்களுக்கான நியமனங்கள் அமையும் அமைச்சர் டக்ளஸ் உறுதி

  அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் நடைபெற்றிருக்குமாயின் அதுதொடர்பாக ஆராய்ந்து, அவை நிவர்த்திக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரச சுற்று நிரூபங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற நியமனங்களில் தலையிடுவது, மக்களுக்கு செய்கின்ற அநீதியாக அமைந்து விடும் எனவும் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் ...

மேலும்..

வெள்ளம் பாதித்த கிளிநொச்சி மக்களுக்கு இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் உதவி! சிறிதரன் எம்.பியின் கோரிக்கைக்கிணங்க

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் -கனடா உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து 5 ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தால் துணுக்காயில் பதிவு!

காணாமல் போனோர் உறவுகளிடமிருந்து மேலதிகமான பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தால் துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இறுதி யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் துணுக்காய், ஐயங்குளம், புத்துவெட்டுவான், கோட்டைகட்டிய குளம் பகுதிகளிலிருந்து  வருகை தந்து, சாட்சியமளித்து ஆவணங்களை ...

மேலும்..