முஸ்லீம் மக்களிற்கு ஒரு மாயாஜாலத்தை காட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றுகின்றனர்
சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லீம்களை தனியான இனம் என இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் முஸ்லீம்கள் விரும்பாத வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு கோரமாட்டார்கள் என ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இன்று(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ் பேசும் மக்கள் என அண்மைக்காலமாக உரையாற்றி வருகின்றார்.எனினும் முஸ்லீம்கள் தமிழ் பேசும் மக்களாக இருந்தாலும் அம்மக்களை தனியான இனம் என சுமந்திரன் போன்றவர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வாறு ஏற்றுக்கொண்டிருந்தால் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு கோரமாட்டார்கள்.ஏனெனில் வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் 15 முதல் 17 வீதம் வரை குறைக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையை தெரிந்திருந்தும் கூட இவர்கள் வடக்கு கிழக்கு இணைப்பினை வலியுறுத்தி வருகின்றார்கள் என்றால் அவர்களது வார்த்தையில் தமிழ் பேசும் மக்கள் என்பதற்கு உண்மையான அர்த்தமில்லை என்பதை கூற முடியும்.
அத்துடன் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கல்குடா தொகுதி பொறுப்பாளரும் கட்சியின் பிரதித் தலைவருமான சல்மான் வஹாப் மற்றும் கட்சியின் கல்குடா தொகுதி ஆலோசகர் முஹம்மத் ஹக்கீம் ஆகியோர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை