பிரதான செய்திகள்

யாழ். வெற்றிலைக்கேணியில் 14 மில்லியன் ரூபா கஞ்சா மீட்பு

  யாழ்ப்பாணம் வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய சாக்கு மூடை ஒன்று மீட்கப்பட்டது. அந்த சாக்கு மூடையை சோதனை செய்த கடற்படையினர், அதில் இருந்து 16 பொதிகளில் ...

மேலும்..

மருந்து ஒவ்வாமை காரணமாவே யாழ்.பல்கலை மாணவி உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி சனிக்கிழமை உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ...

மேலும்..

மட்டக்களப்பு சிறையில் இருந்து 45 கைதிகள் விடுதலை!

இன்று மலர்ந்துள்ள நத்தார் திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 2 பெண் கைதிகள் உட்பட 45 கைதிகள் இன்று திங்கட்கிழமை (25) காலை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் ...

மேலும்..

சட்டத்தரணிகள் சங்கத்துக்கு டிரான் அலஸ் வழங்கிய பதில்

பதில் பொலிஸ் மா அதிபர் நியமனத்தை எதிர்த்த சட்டத்தரணிகள் சம்பந்தமாக என்னால் வெளியிடப்பட்ட கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை என்று தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், யதார்த்தமான விடயத்தையே வெளிப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். பதில் பொலிஸ்மா அதிபர் நியமனத்தை எதிர்த்த சட்டத்தரணிகள் போதைப்பொருள் கடத்தல் ...

மேலும்..

போதைப்பொருள்களுக்கு எதிரான அண்மைய யுத்தம் கேலிக்கூத்து! அம்பிகா சற்குணநாதன் சாட்டை

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் கீழ்மட்ட போதைப்பொருள் விற்பனையாளர்களே பிரதானமாக இலக்குவைக்கப்பட்டிருக்கின்றனர் எனவும், நடுத்தர மற்றும் உயர்மட்டத்திலுள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களை இலக்குவைப்பதன் மூலம் பெருந்தொகையான போதைப்பொருள்களைக் கைப்பற்றமுடியும் என்று சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் ...

மேலும்..

அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் நிலைப்பாடுகளில் மாற்றமில்லை!  உலகத்தமிழர் பேரவை கருத்து

பௌத்த தேரர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய கலந்துரையாடல் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தக்கவைத்துக்கொள்வது எமது நோக்கமல்ல என்று உலகத் தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார். அத்துடன், அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் உலகத்தமிழர் பேரவையின் ...

மேலும்..

அதிவேக நெடுஞ்சாலை பணிகளிலிருந்து அதிரடிப் படையினரை நீக்க அவதானம்!

நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பணிகள் மற்றும் அது குறித்த பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களை அந்தப் பணிகளில் இருந்து நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான ...

மேலும்..

அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு இன ஐக்கியத்துக்காக ஆதரவளிக்குக! சிறுபான்மை தரப்பினரிடம் நீதி அமைச்சர் கோரிக்கை

இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை உறுதிப்படுத்தி சிறந்தவொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டே உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன், இம்முயற்சிக்கு அனைத்து தமிழ்த் தரப்புக்கள் ...

மேலும்..

அலஸின் குண்டர் செயற்பாடுகளுக்கு கத்தோலிக்க திருச் சபை அஞ்சாது!  அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ போர்க்கொடி

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் குண்டர் செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. அருட்தந்தை சிறில் காமினி தொடர்புடைய விபத்து குறித்து பேராயருக்கு நெருங்கிய ஒருவர் அவருடன் தொலைபேசியில் உரையாடினார் என அவர் தெரிவித்துள்ளமை முற்றிலும் பொய்யாகும் என்று பேராயர் ...

மேலும்..

சேறு பூசும் செயற்பாடுகளுக்கு அஞ்சி பின்வாங்கமாட்டோம்! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுதி

நாம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் ஊடக கண்காட்சிகள் என சிலர் விமர்சிக்கின்றனர். இதுபோன்ற சேறு பூசும் செயற்பாடுகளுக்கு அஞ்சப்போவதில்லை. இவ்வாறு செய்தால் நாம் அச்சமடைந்து இந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ளாமல் பின்வாங்குவோம் என நினைக்கின்றனர். நான் அமைச்சுப் பொறுப்பில் இருக்கும் வரையில் பாதாளக் குழுக்களை ...

மேலும்..

குற்றங்களை 50 வீதமாக குறைக்க எம்மால் முடியும் தேசபந்து தென்னக்கோன் சபதம்

குற்றங்கள் பாரியளவில் குறைவடைந்துள்ளன. தற்போதைய சுற்றிவளைப்புகளை விஸ்தரிக்கும் பட்சத்தில் 6 மாதங்களில் குற்றங்களை 50 வீதமாகக் குறைக்க முடியும் என பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு - பாரியளவில் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன எனக் ...

மேலும்..

சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் சிக்கின!

சட்ட விரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான 1,955 கிலோ பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று நுரைச்சோலை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளைப் பிரிவுக்குச் சொந்தமான கடற்படை கப்பலான ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கத் தயார்! மைத்திரிபால பகிரங்கம்

  கட்சியின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக உள்ளார் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடு வங்குரோத்தடைந்தமைக்கு யார் காரணம் என்பதை நீதிமன்றம் தெளிவான பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் ...

மேலும்..

மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள்கள் விற்பனை! மருந்தகத்தின் உதவியாளர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யும் மருந்தகம் ஒன்றின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். வாதுவ, மாவல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். வாதுவ, ...

மேலும்..

மன்னம்பிட்டியில் பாலத்துக்குள் வாகனம் குடைசாய்ந்து விபத்து

பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் ரக கூலர் வாகனமொன்று ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கியுள்ளது. ஞாயிறு நண்பகல் மன்னம்பிட்டியில் உள்ள பாலத்துக்கருகில் வைத்து வாகனத்தின் டயர் வெடித்ததில் பாலத்துக்குள் குடைசாய்ந்துள்ளது. எனினும், வாகன சாரதியின் துரித செயற்பாடு காரணமாக எவருக்கும் உயிராபத்து ஏற்படாத ...

மேலும்..