இலங்கை செய்திகள்

பொதுத்தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை – ரோஹன ஹெட்டியராச்சி

பொதுத்தேர்தலை எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையகத்திற்கு மிகவும் கடினமான விடயமாக அமையப்போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 20ஆம் திகதி ...

மேலும்..

மேலும் ஒருவருக்கு கொரோனா: தொற்று கண்டறியப்பட்ட 27 பேரில் 24 பேர் கடற்படையினர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நேற்று மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 824 ...

மேலும்..

பொதுத்தேர்தலுக்கு எதிராக இதுவரை 10 மனுக்கள் தாக்கல்!

பொதுத்தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகனான, சட்டத்தரணி சரித குணரத்ன, ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், ரீ.எம். பிரேமவர்தன, ...

மேலும்..

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் உணவகங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுமக்களுக்கான ஆலோசனைகள் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ...

மேலும்..

373 கடற்படையினருக்குக் கொரோனா! 14 பேர் சிகிச்சையின் பின் குணமடைவு இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தல்

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 373 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். நேற்றிரவு 9 மணிவரையான கணக்கெடுப்பின்போது இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. தொற்றுக்குள்ளாகியுள்ள கடற்படையினரில் இதுவரை 14 பேர் சிகிச்சையின் பின்னர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று கடற்படை ஊடகப் பிரிவு ...

மேலும்..

கொரோனா அழியவே இல்லை! – 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே பி.சி.ஆர். பரிசோதனை!!

"இலங்கையில் கொரோனா வைரஸ் இன்னமும் முற்றாக அழியவில்லை. பாதிப்புகள் தொடர்கின்றன. இதுவரையில் 30 ஆயிரம் பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளோம். அவற்றில் மூன்று வீதமான கொரோனா தொற்றாளர்கள்  கண்டறியப்பட்டுள்ளனர்." - இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ...

மேலும்..

வேகமாகப் பரவும் கொரோனா! 823 ஆக அதிகரித்தது தொற்று!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. நேற்று 26 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்துப் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 797 இலிருந்து 823 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்தது!

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரையான நிலைவரப்படி 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை ...

மேலும்..

இணுவையூர் பஞ்சாட்சரத்தின் நிதியில் முன்பள்ளி ஆசிரியருக்கு உலர் உணவு!

ஈழத்தின் புகழ்பூத்த புரட்சிக் கவிஞர் இணுவையூர் ச.வே.பஞ்சாட்சரம் (கனடா) அவர்களின் நிதி|யுதவியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் வி.மணிவண்ணனின் ஏற்பாட்டிலேயே இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

மேலும்..

புறக்கோட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 750 மூடை அரிசி கைப்பற்றப்பட்டது

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசி நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து இன்று விநியோகிப்பதற்கு தயாராகவிருந்த நிலையில், அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ...

மேலும்..

இனவாதிகளை இயக்குகின்ற ராஜபக்சக்கள் நினைத்தால் தீர்வு கிடைப்பது உறுதியே! – எனினும் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறாது என்கிறார் சஜித்

"நல்லாட்சி அரசில் அரசியல் தீர்வுக்கான புதிய அரசமைப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய விவகாரங்களைக் குழப்பியடித்தவர்கள் ராஜபக்ச அணியினரேயாவர். அவர்கள்தான் இனவாதிகளையும் இயக்கி தீர்வு விடயங்களுக்கு எதிராக வெளியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தச் செய்தார்கள். எனவே, ராஜபக்சக்கள் நினைத்தால் தமிழர்களின் அனைத்துப் ...

மேலும்..

ஜூன் மாதம் நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும்- லக்ஷமன் யாப்பா எதிர்பார்ப்பு

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, பலமான அரசாங்கம் தோற்றம்பெற வேண்டுமாயின் தேர்தல் முறையில் திருத்தம் செய்வது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தொடர்பாக ஊடகம் ...

மேலும்..

5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் பிரதேச செயலாளரிடம் முறையிட முடியும்- வவுனியா அரச அதிபர்

அரசாங்கத்தால் கொரோனா இடர்கால கொடுப்பனவாக வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் தமது பிரிவு பிரதேச செயலாளரிடம் மேன்முறையீடு செய்ய முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் கொவிட் -19 ...

மேலும்..

வடக்கு – கிழக்கு தமிழ் கூறும் நல்லுலகிற்கு சின்னத்தம்பி ஐயாவின் மறைவு பேரிழப்பு!

தந்தை செல்வா காலத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவர் அமரத்துவமடைந்த வேலுப்பிள்ளை சின்னத்தம்பி ஐயா. அவரது மறைவு வடக்குக் கிழக்கு தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் என்று அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். இலங்கைத் ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் இணைவதற்காக செல்லவில்லை அவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் சென்றார்கள்- முன்னாள் அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் அரசாங்கம் அண்மையிலே அரசாங்கம் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்திருந்துத. அந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர அவர்கள் அரசாங்கத்தில் இணையவில்லை என முன்னாள் அமைச்சர் ...

மேலும்..