இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் சிகை அலங்கார நிலையங்களில் முகச்சவரம் செய்வது தவிர்த்துக் கொள்ள வேண்டும்!

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் சிகை அலங்கார நிலையங்கள் திறக்கப்பட்டு சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும் கொனோரா தொற்று நோய்க்கு உள்ளாகாதப்படி சுகாதாரத்தை கட்டாயம் பேணப்பட வேண்டும். சிகை அலங்கார நிலையங்களில் முகச்சவரம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இது விடயமாக மன்னார் மாவட்ட ...

மேலும்..

கொரோனா நோய்த்தொற்றுக்கு முகம்கொடுத்துள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் ஆசிவேண்டி பிரித் பாராயணம்

கொரோனா நோய்த்தொற்றுக்கு முகம்கொடுத்துள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் ஆசி வேண்டி நாட்டின் அனைத்து விகாரைகளிலும் இடம்பெற்ற பிரித் பாராயண நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு கலாநிதி சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரரின் தலைமையில் வாத்துவ, மொல்லிகொட பிரவசனோதய பிரிவெனா விகாரையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. வாத்துவை ...

மேலும்..

மனித வெடிகுண்டுகளாக அநாதைப் பிள்ளைகள்: சஹ்ரான் குழுவினர் குறித்த அதிர்ச்சித் தகவல்!

ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதல்களின் மூளையாகச் செயற்பட்டதாக நம்பப்படும் பயங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் குழு, புத்தளம் – வனாத்துவில்லு பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பிள்ளைகளை மனித வெடிகுண்டுகளாக சமூகமயப்படுத்த திட்டமிட்டிருந்ததாக ...

மேலும்..

ஊரடங்கு தளர்த்தப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி இருக்கின்றபோதும் நான்கு மாவட்டங்களிலிருந்து வருவோர் பாஸ் பெற்றே பயணிக்க வேண்டும்.

தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு நாடு வழமைக்கு திருப்பியதாக இருந்தாலும் சுகாதார சம்பந்தமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் மன்னாரில் மேற்கொள்ளப்படும். குறிப்பிடப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களிலிரு மன்னார் வந்து செல்வோர் மீது பாஸ் நடைமுறை தொடரும் என இது விடயமாக நடைபெற்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஐனாதிபதியின் விஷேட செயலனியின் ...

மேலும்..

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலர் கடனுதவி!

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு 25 மில்லியன் டொலரை வர்த்தக கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. N-95 மருத்துவ முகக் கவசங்கள், அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துவப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதற்காக இந்த ...

மேலும்..

வவுனியா, பம்பைமடு குப்பை மேட்டில் தீ!

வவுனியா, பம்பைமடு குப்பைமேட்டில் ஏற்பட்ட தீப்பரவல் குடிமனையை நோக்கி நகர்ந்த நிலையில் நகரசபை தீயணைப்புப் பிரிவினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பம்பைமடுப் குப்பை மேட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தீயணைப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ...

மேலும்..

சகல திணைக்களங்களும் உரிய சுகாதார முறையை தொடர்ந்து பின்பற்றவும்: கிளி. அரச அதிபர் வலியுறுத்து!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல திணைக்களங்களும் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சேவைகளை வழங்க வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு இயல்புநிலை ஏற்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ...

மேலும்..

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 5 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் 228 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்கு நீதிமன்றினால் தண்டப்பணம் விதித்து அதனைச் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்த 5 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் இன்று (வியாழக்கிழமை) விடுதலை ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 232 ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும்  17 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய இதுவரை 232 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன்,  இதுவரை 797 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது ...

மேலும்..

எதிர்க்கட்சியினரை விட புலிகள் மேலானவர்கள்! – வாசுதேவ தெரிவிப்பு

"சுனாமி உள்ளிட்ட இடர் வேளைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவில்லை. இதனால்தான் அன்றைய காலத்தில் அரசால் மீட்பு நடவடிக்கைகளையும் ஏனைய இடர்கால நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிந்தது. ஆனால் தற்போதைய எதிர்க்கட்சியினர் அப்படியல்லர்." - இவ்வாறு தெரிவித்தார் வாசுதேவ நாணயக்கார. அவர் மேலும் ...

மேலும்..

சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்கான ஊசி மருந்தை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்கான ஊசி மருந்தை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் ஊசி மருந்துகளை வழங்கும் நடவடிக்கை 3 வாரங்கள் தாமதமடைந்திருந்ததாகவும் எனினும் சுகாதார வைத்திய அதிகாரி ...

மேலும்..

12 கடற்படையினர் கொரோனாவிலிருந்து மீண்டனர்!

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை உறுப்பினர்கள் 12 பேர் இதுவரை மழுமையாக குணமடைந்துள்ளனர். கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமான்டர் இசுறு சூரிய பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் இருந்து கடற்படையினர் விலகியுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை ...

மேலும்..

கிளிநொச்சியில் பலத்த காற்றுடன் மழை: பப்பாசி செய்கை கடுமையாகப் பாதிப்பு!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக பப்பாசிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார். முழங்காவில் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக ...

மேலும்..

முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை!

கொரோனா முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முடக்க நிலை தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையிலேயே அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!

தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் இந்தியாவின் புதுடெல்லியில் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து 11 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ...

மேலும்..