இலங்கை செய்திகள்

கூட்டமைப்பின் முகவரே ஹூல்! – மஹிந்த அணி குற்றச்சாட்டு

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் செயற்படுகிறார்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- "தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஐவரை நியமிக்கமுடியும். ஆனால், ...

மேலும்..

2020 பொதுத் தேர்தல் – சுகாதார வழிகாட்டுதல்கள் அடுத்த வாரம்..!

2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டல் கையேடு அடுத்த வாரத்திற்குள் தயாராக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜூன் 20 ஆம் திகதி சுகாதார வழிகாட்டலுடன் பொதுத் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ...

மேலும்..

சுகாதார அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே திறக்க முடியும் – அனில் ஜாசிங்க

சுகாதார அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே சலூன்கள் மற்றும் அழகு கலை நிலையங்களை திறக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் விரைவில் வழங்கப்படும் என்று ...

மேலும்..

கணவனை அடித்து கொன்றுவிட்டு பொலிஸில் சரணடைந்த மனைவி!

மதுபோதையில் தினமும் துன்புறுத்திய கணவனை பொல்லால் அடித்துக் கொன்றுவிட்டு, மனைவி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஹாலி எல, டெபதேவட்ட பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 36 வயதுடைய பெண்ணே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தினமும் மதுபோதையில் வரும் கணவன், மனைவியைத் துன்புறுத்தி வந்துள்ளார். கொடுமையைப் ...

மேலும்..

லண்டனிலிருந்து 194 பேர் நாடு திரும்பினர்

லண்டனில் சிக்கியிருந்த மேலும் 194 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளார். இவர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டை வந்தடைந்த இவர்கள் பேருந்துகள் மூலம், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மேலும்..

தமிழ் மக்களின் எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டே தமிழ்தேசியகூட்டமைப்பு பிரதமர் மகிந்தவின் அழைப்பை ஏற்றது! பா.அரியநேத்திரன். மு.பா.உ.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையிலும் பிரதமர் மகிந்த ராஷபக்‌ஷவின் அழைப்பை தமிழ்தேசிய கூட்டமைப்பு மதித்துள்ளது.வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் விடயங்களை கருத்தில் கொண்டே பிரதமர் மகிந்த ராஷபக்‌ஷவின் அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற ...

மேலும்..

20 பேரில் 15 பேர் கடற்படையினர்

நேற்றைய தினம்(செவ்வாய் கிழமை) இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேரில் 15 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடயத்தினைத் இந்த தெரிவித்துள்ளார்.

மேலும்..

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வு – சகோதரன் உட்பட இருவர் விளக்கமறியலில் !

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் சகோதரன் மற்றும் மாமன் உறவு இளைஞனையும் வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அவரது தாயார் வைத்தியசாலைக்கு ...

மேலும்..

ஊரடங்கு இன்றிய மாவட்டங்களில் 2,300 இ.போ.ச. பஸ்கள் சேவையில்!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரத்து 300 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்று இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்தாலும்,  மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன எனவும், மாவட்டங்களுக்குள் மாத்திரம் பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன எனவும் ...

மேலும்..

கொரோனாவை பயன்படுத்தி ஆட்சியதிகாரத்துக்கு வர ஜனாதிபதி தரப்பு முயற்சி – சுஜீவ குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, கொரோனா விவகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியதிகாரத்திற்கு வரவே ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள் என சஜித் ஆதரவு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் ...

மேலும்..

சட்டபூர்வ அதிகாரம் நாடாளுமன்றுக்கே இருக்கின்றது, இல்லையெனில் அதிகாரங்களை நிரூபிக்குமாறு மங்கள சவால்

ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியில் இருந்து எப்போதோ மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்படும் வரை அரச நிதியை செலவிடுவதற்கான சட்டபூர்வ அதிகாரம் நாடாளுமன்றத்தால் மாத்திரமே வழங்கப்பட முடியும் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ள ...

மேலும்..

‘குடும்பத்திற்கு 20 ஆயிரம் வழங்குங்கள்’ – அரசுக்கு வலியுறுத்தினார் சஜித்

கொரோனா நிவாரணத் தொகையாக, ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாயை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு ...

மேலும்..

கொரோனா ஒழிப்புக்கு பல்வேறு தரப்பினரும் உதவி

சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் ஹேன்ஸ் பீடர் மொக்கின் (Hans Peter Mock) பணிப்புரையின் பேரில் வாரியோ சிஸ்டம் (VARIO SYSTEMS) நிறுவனம் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்காக 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்துள்ளது. வாரியோ சிஸ்டம் நிறுவனத்தின் முகாமைத்துவ ...

மேலும்..

இலங்கையின் சமகால நிலைமைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த – அமெரிக்கத் தூதுவர் பேச்சு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைய்னா டெப்லிட்ஷ் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். கொரோனா வைரஸை எதிர்க்கொள்ளும் இலங்கையின் நடவடிக்கைகள், பொருளாதார சவால்கள் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ...

மேலும்..

இடர் வலயங்களில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவது குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல்

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளாந்த இயல்பு வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டுவருவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார். கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளாந்த இயல்பு ...

மேலும்..