இலங்கை செய்திகள்

கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட குறித்த கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள், இலங்கை துறைமுக அதிகாரசபை ...

மேலும்..

நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு- அனந்தி சந்தேகம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகாளானது அவர்கள் ஓர் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாக வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடல் ...

மேலும்..

மேல் மாகாண தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரத்திற்கான காலம் நீடிப்பு

மேல் மாகாண தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரத்திற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 31 ஆம் திகதி வரை குறித்த காலம் நீடிக்கப்பட்டுள்ளதோடு, அதற்காக எந்தவொரு வரியும் அறவிடப்படாது எனவும் மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ...

மேலும்..

ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக விசேட நிதியம்

சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பிற்காக ஜனாதிபதி செயலகம் ´இட்டுகம´ என்ற விசேட நிதியத்தை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் இந்த நிதியம் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியத்திற்கு நன்கொடைகளை #207# என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்தோ அல்லது www.itukama.lk என்ற இணையத்தள முகவரியை பயன்படுத்தியோ வழங்க முடியும் ...

மேலும்..

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை சேர்ந்த சிலர் சுகாதார அறிவுறுத்தல்களை சரிவர பின்பற்றுவதில்லை – அஜித் ரோஹண

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சாதாரண நிலைமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை சேர்ந்த சிலர் சுகாதார அறிவுறுத்தல்களை சரிவர பின்பற்றுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எதிர்வரும் நாட்களில் பல ...

மேலும்..

கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் ஹற்றனில் சிகையலங்கார நிலையங்கள் திறப்பு!

கடும் நிபந்தனைகளுடன் ஹற்றன் நகரிலுள்ள சிகையலங்கார நிலையங்களைத் திறப்பதற்கு இன்று (வியாழக்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை சிகையலங்கார நிலையங்களில் முடி மாத்திரமே வெட்டப்பட வேண்டும் என பொது சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தொடர் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 63 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அதற்கமைய கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 445 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பிய 63 பேரில் 59 பேர் கடற்படையினர் என இலங்கை கடற்படை ...

மேலும்..

திருநெல்வேலி பொதுச்சந்தை மீண்டும் வேறு இடத்துக்கு இடம்பெயர்கிறது!

யாழ்ப்பாணம், கலாசாலை வீதியில் தற்காலியமாக இயங்கிவந்த திருநெல்வேலி பொதுச்சந்தை நாளை மறுதினம் முதல் ஆடியபாதம் வீதியிலுள்ள தனியார் காணியில் இயங்கும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பொதுச் ...

மேலும்..

மாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கை பிரஜைகள் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கை மற்றும் ஜப்பான் பிரஜைகள் 304 பேர் இலங்கையை வந்தடைந்தனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் – 102 என்ற விசேட விமானம் மூலமாக அவர்கள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் கட்டுநாயக்க ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு மரநடுகை: மரக்கன்றுகள் வழங்குநர்களின் விபரத்தை வெளியிட்டார் சி.வி.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாள் வரும் மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில், நினைவு நாளன்று பயன்தரு மரங்களை நாட்ட உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இதனால், மக்களின் ஒவ்வொருவரின் வீடுகளிலும் சுற்றுப் புறங்களிலும் பயன்தரு மரங்களை ...

மேலும்..

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டண பட்டியல்களை தனித்தனியாக வழங்குமாறு உத்தரவு

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டண பட்டியல்களை தனித்தனியாக வழங்குமாறு மின்சாரசபை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சாரசபை அதிகாரிகளுக்கும்  மின்சாரம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது, இரண்டு மாதங்களுக்கான மின்சார கட்டணங்களை ஒரே பட்டியலில் ...

மேலும்..

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கு புதிய நெடுஞ்சாலை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கான புதிய நெடுஞ்சாலையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) 9 மணியளவில் குறித்த நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்ரசிறி மற்றும் சிவில் விமான போக்குவரத்து ...

மேலும்..

மங்கள சமரவீர CIDயில் முன்னிலை

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தவர்களை வாக்களிப்பில் ஈடுபடுத்த மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார். குறித்த ...

மேலும்..

கொரோனாவை காரணம் காட்டி தொழிலை பறிக்க முடியாது – பந்துல குணவர்த்தன

கொரோனாவை காரணம் காட்டி தனியார் துறை ஊழியர்களின் தொழிலை பறிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டின் இப்போதுள்ள ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் வாரத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் வாரத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) நவாலி சென் பீற்றர் தேவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது. இதன்படி ...

மேலும்..