July 4, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்திய தரத்தில் எடுக்கப்பட்ட “கலகமானிடா” ஈழத்து பாடல் மக்களின் மனதில் இடம்பிடித்து வருகின்றது….

நடுத்தர குடும்ப இளைஞனின் எதார்த்தமான வாழ்க்கையை கூறும் பாடலாக வெளியிடப்பட்ட "கலகமானிடா" பாடல் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. இப்பாடல் இந்திய தரத்தில் எடுக்கப்பட்ட ஈழத்து பாடலாக்கு.இதற்கு இசையமைப்பு ஹுமாபிரியன் ,ஒளித்தொகுப்பு மற்றும் படத்தொகுப்பை சஜித் அவர்களும் சிறப்பான முறையில் செய்துள்ளனர்.மேலும் இப்பாடல் துலக்சன்,சதுர்சன்,பரவிந்தன்,தசானந்,சோபி ...

மேலும்..

தமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார் சிறீதரன்

தமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு ...

மேலும்..

ரிஷாத், ஹக்கீமுடன் நானும் கட்டாயம் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாட்டில் அமீர் அலி உரை 

"புதிய நாடாளுமன்றத்தில் கட்சி, கொள்கைக்கு அப்பால் அனுபவமும் ஆளுமையும் கொண்ட நல்ல அரசியல் தலைவர்கள் இருக்க வேண்டும். அந்தவகையில் கண்டியிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும், வன்னியிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனும், மட்டக்களப்பு ...

மேலும்..

தற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்

தற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எனவே, இந்த நாட்டில் புதிய ஆரம்பம், புதிய ஆட்சி முறை, புதிய சிந்தனையாளர்களே தேவை ...

மேலும்..

வெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்

கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் களத்தில் நிற்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ...

மேலும்..

அரசியல் தீர்வுக்கான முயற்சிகளுக்குச் சமாந்திரமாக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் செயற்படுவோம்! வடமராட்சி கிழக்குப் பரப்புரைக் கூட்டத்தில் சுமந்திரன் விளக்கம்

56 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் சமஷ்டித் தீர்வுக்கும் 77 இல் தனிநாட்டிற்காகவும் வாக்களித்து வந்தார்கள். இதனடிப்படையில் சமஷ்டி என்பது எமது மக்களின் நீண்ட கால ஜனநாயகத் தீர்ப்பாகும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் ...

மேலும்..

திருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்! தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம்; தலைவர் சம்பந்தன் அறைகூவல்

"திருகோணமலை தமிழர்களுக்குச் சொந்த மண் என்பதை இம்முறை பொதுத்தேர்தலில் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். திருகோணமலையிலுள்ள அவரது வீட்டில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் ...

மேலும்..

வாழைச்சேனை பேத்தாளை பாலீஸ்வரர் சிவன் ஆலய கும்பாவிஷேகத்தினை தொடர்ந்து நடைபெற்ற சங்காபிஷேக நிகழ்வு

வாழைச்சேனை பேத்தாளை பாலீஸ்வரர் சிவன் ஆலய கும்பாவிஷேகத்தினை தொடர்ந்து நடைபெற்ற சங்காபிஷேக நிகழ்வு 04/07/2020 இன்று மிகவும் சிறப்பாக பிரதான கும்பம் வீதியுலா வருகை தந்து மூல விக்கிரகம் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது இன் நிகழ்வில் பல பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும்..

மஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்

மஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். நுவரெலியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் நவீன் திஸாநாயக்க ...

மேலும்..

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டாரில் இருந்து 17 பேர் நாடுதிரும்பினர்

பயணக் கட்டுப்பாடு காரணமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டார் நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 17 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று டுபாயில் இருந்து ஏழு பேரும் 10 பேர் கட்டாரில் இருந்தும் நாடு திரும்பியதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு ...

மேலும்..

ஜிந்துப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

கொழும்பு, ஜிந்துப்பிட்டிய பகுதியில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த முடிவுகளில் 50 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை எனவும், எனினும் அவர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்த ...

மேலும்..

வீரர்களை எதற்காக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்- மஹிந்தானந்த கேள்வி

ஆட்டநிர்ணய சதியில் விளையாட்டு வீரர்கள் எவரையும் குறிப்பிடவில்லை. ஆகவே எதனடிப்படையில் அவர்களை விசாரணைக்கு அழைத்தனரென முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த  அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார். நுவரெலியா- நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ...

மேலும்..

தனித்து நின்றால் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாது- கணேசபிள்ளை

நாங்கள் ஒன்றாக இணைந்தே எமது உரிமைகளைப் பற்றிப் பேசவேண்டும். தனித்தனியே நின்று கேட்பதனால் எந்த பலுனும் கிடைக்காதென பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட வேட்பாளர் கணேசபிள்ளை தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ...

மேலும்..

கட்சி குறித்து சிந்தித்தாரே தவிர மக்களைப் பற்றி விக்னேஸ்வரன் சிந்திக்கவில்லை- பிமல்

வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த 5 வருடகாலமாக மக்கள் தொடர்பாக சிந்திக்காது, தனது கட்சி குறித்தே சிந்தித்து வந்தார் என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

மாட்டுடன் கார் மோதி விபத்து – தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

வவுனியா – புளியங்குளம் சன்னாசிபரந்தன் பகுதியில் மாட்டுடன் மோதிய கார் கடுமையான சேதமடைந்ததுடன், அதன் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். இன்றயதினம் காலை10 மணியளவில் முல்லைத்தீவிலுருந்து வவுனியா நோக்கி வருகைதந்த கார் வீதியின் எதிரே சென்ற மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகியது. விபத்தில் குறித்த கார் ...

மேலும்..

மக்களின் பிரச்சினை பட்டினியே தவிர நாட்டின் பிளவு அல்ல- ரணில்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை பட்டினியே தவிர நாட்டின் பிளவு அல்லவென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பொதுக்கூட்டத்தில் ரணில் மேலும் கூறியுள்ளதாவது,  “நாடு முழுவதிலும் உள்ள மக்களில் ...

மேலும்..

ஜூலை 6 ஆம் திகதி 2 ஆவது கட்டத்தின் கீழ் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

நான்கு கட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் திறக்கும் முடிவை அடுத்து, தரம் 5, 11 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சுஅறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை- விஜயதாச

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணை  முறி மோசடியில் தொடர்புப்பட்டுள்ள 4 முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் கொழும்பு வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாலளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று: 22 பேர் குணமடைவு!

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் மொத்தமாக தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 22 பேர் குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார ...

மேலும்..

பிரித்தானியாவின் “குறைந்த ஆபத்து” கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இல்லை

14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் இல்லாமல் 50 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஜூலை 10 வெள்ளிக்கிழமை முதல் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரித்தானியா நேற்று அறிவித்தது இருப்பினும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் குறிப்பாக சமூக தொற்று பரவவில்லை ...

மேலும்..

வனப்பகுதி நிலத்தை பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைப்பதற்கான முடிவை நிறுத்துங்கள்

வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள 500,000 ஹெக்டேர் வனப்பகுதியை பிரதேச செயலாளர்களுக்கு வழங்குவதற்கான முடிவை இடைநிறுத்தக் கோரி ஜே.வி.பி. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளது. அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்கவின் கையெழுத்திடப்பட்ட குறித்த கடிதத்தில், நிலப்பரப்பு தொடர்பான ...

மேலும்..

கருணாவை புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம்- ரஞ்சித் மத்தும பண்டார

நாங்கள்தான் கருணாவை தாய்லாந்திற்கு அனுப்பி, புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம் என ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கருணா அம்மான் வெளியிட்டுள்ள சர்ச்சையான கருத்து தொடர்பாக எந்ததொரு நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கப்படாமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

பொதுமக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் – ரணில் உறுதி

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டின் ஒவ்வொரு துறையையும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் ...

மேலும்..

கிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இயக்கச்சி பகுதியிலுள்ள ஒரு வீடு ஒன்றிலேயே நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவத்தில் காயமடைந்தவருக்கு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ...

மேலும்..

தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த மேலும் 152பேர் வீடுகளுக்கு திரும்பினர்

வவுனியா- வேளான்குளம், வன்னி விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 152 பேர், தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். குறித்த 152 பேரும், பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதில் அதிகமானோர், கொழும்பு, ...

மேலும்..

கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு மாணவன் உயிரிழப்பு- கல்முனையில் சோகம்

கல்முனை பகுதியிலுள்ள குளமொன்றினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்ட  பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கல்முனை துரைவந்தியமேடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயின்று வந்த, மோ.ஜதுர்சன்(வயது. 10) ...

மேலும்..

எதிர்வரும் பொதுத்தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி அரசியல் அத்தியாயம் – பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது என்றும் எதிர்வரும் பொதுத்தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி அரசியல் அத்தியாயம் என்று கூட குறிப்பிடலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலியத்தை  பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார ...

மேலும்..

விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படும் – ஜனாதிபதி

தற்போது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்த்து விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்ட ஜனாதிபதி விவசாயிகள் முகங்கொடுத்துவரும் நீர் மற்றும் ஏனைய ...

மேலும்..

சரித்திரம் படைக்கும் கூட்டமைப்பு – இரா. சம்பந்தன்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்று சரித்திரம் படைக்கும் என அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கை தனக்கு உள்ளது என குறிப்பிட்ட அவர் அனைவரும் தவறாது வாக்களிப்பில் கலந்துகொண்டு வாக்களிக்க வேண்டும் என்றும் ...

மேலும்..

கொரோனா வைரஸ்: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

நாட்டில், நேற்று மட்டும் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,069 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர்களில் இருவர் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று: பிரான்ஸில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- மல்லாகத்தை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் அஜந்தன் (வயது-40) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன், சுமார் 1 மாதகாலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மேலும் ...

மேலும்..