July 9, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் மீதே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ...

மேலும்..

ஹம்பாந்தோட்டையைப் போன்று குருநாகல் அப்பாவி மக்களையும் பலிக்கடாவாக்க முயற்சி- அசாத் சாலி

ஹம்பாந்தோட்டை மக்களை ஏமாற்றியது போல், குருநாகல் மாவட்ட மக்களையும் வாக்குகளுக்காக இப்போது ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், ...

மேலும்..

போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் சான்றுப்பொருள் களஞ்சியசாலையில் சோதனை நடவடிக்கை!

போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின், வழக்குகளின் சான்றுப்பொருட்கள் உள்ள களஞ்சியசாலையை அரச பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகள்  சோதனையிட்டு வருகின்றனர். குறித்த களஞ்சியசாலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முத்திரையிடப்பட்டிருந்த நிலையில், கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவால் நேற்று பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவிற்கமைய இன்று (வியாழக்கிழமை) இந்த ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சி நூற்றாண்டு கடந்தும் நிலைத்து நிற்கும் – நவீன் திஸநாயக்க!

ஐக்கிய தேசிய கட்சி நூற்றாண்டு கடந்தும் நிலைத்து நிற்கும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய தேசியக் ...

மேலும்..

இலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வெலிக்கட சிறைச்சாலை கைதிகள் மற்றும் ஊழியர்கள் என 450 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 56 ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறக்கப்பட்டது கொரோனா பரிசோதனை கூடம்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் பொருட்டு பரிசோதனைக் கூடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆய்வகம் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடையும் பயணிகளுக்கு, இலவசமாக பி.சி.ஆர். ...

மேலும்..

முகக்கவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுவர் – வைத்தியர் சுகுணன்

பொது இடங்களில் முககவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள்   தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முகாமிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனகல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை பிராந்திய எல்லைக்குட்பட்ட ...

மேலும்..

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆயுதத்தை பயன்படுத்திய ஒரே நாடு இலங்கை என்கிறார் சிறீதரன்

கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழர் தேசத்தில் கனரக ஆயுதங்களை பயன்படுத்திய நாடுதான் இலங்கை எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். உதயநகர் கிழக்கு மக்களுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழர்கள் ...

மேலும்..

யாழில் 7 ஆசனங்களும் கூட்டமைப்பு வசமாகும்! சரவணபவன் நம்பிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 7 ஆசனங்களையும் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றும்." - இவ்வாறு யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். "மரத்தில் குருவிச்சை இருந்தால், குருவிச்சையை மட்டும் வெட்டி விடுங்கள். மரத்தையே வெட்டி விடாதீர்கள்" என்றும் அவர் கோரிக்கை ...

மேலும்..

நல்லாட்சியில் தமிழ்க் கூட்டமைப்பு நல்ல கருமங்களையே செய்வித்தது – மாவை தலைமையிலான கூட்டத்தில் தபேந்திரன் தெரிவிப்பு

"நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்குப் பல்வேறு அழுத்தங்களை வழங்கி தமிழ் மக்களுக்கு நல்ல கருமங்களையே செய்வித்தது. அதை அறிந்தும் மாற்று அணியினர் சிறுபிள்ளைத்தனமாகக் கூட்டமைப்பினரை விமர்சித்து வருகின்றனர்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தில் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்சர்கள் அஞ்சுகிறார்கள்- சிறீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்சர்கள் அஞ்சுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். . புலோப்பளை மக்களுடனான சந்திப்பு இன்று நடைபெற்றது. குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்  அண்மையில் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவரும்  மகிந்த ராஜபக்ச அவர்களின் சகோதரனான பசில் ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். அவரின் சகோதரன் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது இரண்டு வரவு செலவு திட்டங்களிற்கு நாம் ஆதரவளித்து இருக்கிறோம். எங்கள் இனத்தின் நிரந்தர அரசியல் தீர்விற்காகவே நாம் ஆதரவளித்திருந்தோம். நாம் அவர்களோடு19 தடவைகள் நாங்கள் பேசியிருக்கிறோம்.19 தடவைகளும் பொய்களையும் பிரட்டுக்களையும் கூறினார்கள்  ஆனால் அவர்கள் எந்தவிதமான தீர்வுகளையும் தரவில்லை.13+ ஐ கொடுக்கப் போவதாக கூறி எம்மை ஏமாற்றியவர்கள் இப்போது 13 ம் இல்லை என்கிறார்கள். இப்போது வடக்கு மாகாணம் முழுவதும் புதிதாக இராணுவ சோதனை சாவடிகள் முளைத்திருக்கின்றன. இதனால் இந்த நாடு முழுவதும் ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது.  இந்த விடயங்களை சிங்கள மக்கள் நன்கு புரிந்து விட்டார்கள் ராஜபக்சாகளின் இராணுவ ஆட்சியை நன்று  விளங்கிவிட்டார்கள் இவர்களின் உண்மை நிலைப்பாட்டை சில சிங்கள கட்சிகள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் தோற்று விடுவோமோ னிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்ற பீதி ராஜபக்சாக்களை ஆட்கொண்டுள்ளது நாட்டில் ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்.

வ.ராஜ்குமாா் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட மூதூர் தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அடுத்த வாரத்தில் தீவிரமாக இடம்பெறவுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவரும் வேட்பாளருமான ச.குகதாசன் இன்று 9ம் திகதி ஊடகங்களுக்கத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக ...

மேலும்..

பௌத்த பெரும்பான்மை அரசு வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்கும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது – உதயகுமார்

பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை அளித்து ஏனைய இன மக்களினதும் அவர்களின் மதங்களையும் அடக்கி ஒடுக்குவதற்கான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கும் அரசு வடக்கு கிழக்கையும் ஆக்கிரமித்து தமிழ் மக்களை நசுக்க நினைக்கிறது என மட்டக்களப்பில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் மாணிக்கம் ...

மேலும்..

வெலிக்கட சிறைச்சாலையில் மேலும் 294 கைதிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பினைப் பேணியதாக மேலும் 294 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த கைதிகள் இன்று (வியாழக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ...

மேலும்..

தேர்தல் பிரசாரத்திற்காக சஜித் பிரேமதாஸ நுவரெலியாவிற்கு விஜயம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ நுவரெலியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையிலேயே அவர் எதிர்வரும் 15ஆம் திகதி அங்கு விஜயம் செய்யவுள்ளார். நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளிலும் ...

மேலும்..

பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல் கூட்டம்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எவ்வாறு சுகாதார நடைமுறையுடன்  கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலான அறிவுறுத்தல் கூட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டமானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சுற்றாடல் பாதுகாப்பு பொறுப்பதிகாரி எஸ்.எல் சம்சுதீன் ...

மேலும்..

தொல்பொருள் ஆய்வு குழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

தொல்பொருள் ஆய்வுகுழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 11ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு, ஜனாதிபதி நியமித்துள்ள தொல்பொருள் ஆய்வுகுழுவில் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 12 பேர் மீண்டனர்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1979 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 12 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் 2 கடற்படையினரும் உள்ளடங்குவதாக கடற்படை பேச்சாளர் ...

மேலும்..

வடக்கில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்!

வடக்கில் கடந்த 7 மாதங்களில்  2327 kg கஞ்சா போதைபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த 7 ...

மேலும்..

வன்னி மக்களின் துயர் துடைக்க முன்வந்துள்ள வீரப்பெண்மணி

பிரச்சனை இல்லாத மனிதர்கள் இல்லை. பிரச்சனைகள் வரும்போது தீர்வை தேடுவது மனித இயல்பு. ஆனால் நாம் தேடும் தீர்வானது சரியானதாகவும், நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டும்.         இதற்கு தீர்வு தேடும் வகையில்  களம் இறங்கியுள்ளார்      வவுனியாவில்  ...

மேலும்..

யாழில் திடீர் என முற்றுகையிடப்பட்ட வீடு – கைக்குண்டு, இராணுவச்சீருடை, வாள்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம்  முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்கள் தங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட வீடு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. நீர்வேலி கரந்தனில் உள்ள குறித்த வீட்டின் ...

மேலும்..

நல்லாட்சி அரசாங்கமே நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு வழியேற்படுத்தியது – மஹிந்த

நல்லாட்சி அரசாங்கம் உளவுத்துறையை முடக்கி தகவல்களை மறைப்பதன் மூலம் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு வழி ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகல் கடுகம்பளை பிரதேசத்தில் நேற்று ( புதன்கிழமை) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பொன்றின் ...

மேலும்..

விமானப் படைக்கான ஹெலிகொப்டர் கொள்வனவிற்கு அனுமதி!

இலங்கை விமானப் படை விமானிகளின் பயிற்சிக்காக 4 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

மதகுருமார், அடிப்படைவாதிகளைக் கொண்டு அரசியலமைப்பு தயாரித்த நாடுகளின் கதியை மறக்கக்கூடாது- மங்கள எச்சரிக்கை!

மதகுருமார்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகளை இணைத்து அரசியலமைப்பினைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை மறந்துவிட்டு செயற்படக் கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ற் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுகுறித்து தனது ருவிற்றர் பதிவில் ...

மேலும்..

தாயை இழந்து பரிதவித்த யானைக்குட்டி மீட்பு!

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் தாயை இழந்து தனிமையிலிருந்த யானைக்குட்டி ஒன்று நேற்று(புதன்கிழமை) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா பூவரசன்குளம் வேலன்குளம் பகுதியில் மூன்று மாதம் நிறைந்த யானைக்குட்டி ஒன்று நேற்று மாலை தனிமையில் அப்பகுதியில் இருப்பதை கண்ட ...

மேலும்..

எம்.சி.சி. குறித்த ஆய்வுக் குழுவின் அறிக்கையை ஆராய மேலும் அவகாசம் வழங்கினார் ஜனாதிபதி

அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பான ஆய்வுக் குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேலும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அவசாசம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதுகுறித்து சில அமைச்சர்கள் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் ...

மேலும்..

மாமாங்கேஸ்வரர் உற்சவத்தில் ஒரே நேரத்தில் பங்கேற்க 50 பேருக்கு அனுமதி!

மட்டக்களப்பு, அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோவில் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இம்மாதம் 20ஆம் திகதி ஆடி அமாவாசை தீர்த்ததுடன் நிறைவு பெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில், சுகாதாரத் திணைக்களத்தின் ஆலோசனைக்கிணங்க கோவிலுக்குள் ஒரு ...

மேலும்..

தேர்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைக்கு உத்தரவு!

எதிர்வரும் ஓகஸ்ற் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அந்தவகையில், 1981 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சட்டம், பொலிஸ் கட்டளைச் சட்டம் ...

மேலும்..

மோசடியில் ஈடுபட்ட இந்திய பிரஜை கைது

இந்திய பிரஜை ஒருவர் பம்பலப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ...

மேலும்..

ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆஜராகியுள்ளார். கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார். இதுகுறித்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் ...

மேலும்..

அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை

அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை தனியார் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது சட்ட விரோதமானது எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோன்று வேட்பாளர்களின் பதவிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றமை ...

மேலும்..

வவுனியாவில் நடத்துனரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு 

வவுனியா நிருபர் நடத்துனரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (09.07.2020) காலை 5.30 மணி தொடக்கம் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காலை 8.30 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் கடமையாற்றும் நடத்துனர் கடந்த ...

மேலும்..

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 164 பேர் விடுவிப்பு!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் வவுனியா பெரியகட்டு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 164 பேர் இன்று(வியாழக்கிழமை) அங்கிருந்து வெளியேறியுள்ளனர். கொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது . அந்தவகையில் ...

மேலும்..

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், முருகன் ஆலயம் மீதான தாக்குதல்: 25ஆம் ஆண்டு நினைவுகூரல் இன்று!

யாழ்ப்பாணம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம்  திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம ...

மேலும்..

வாள்வெட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவர் கைது!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம்  முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்புப் பொலிஸ்  பிரிவினரால் சந்தேக நபர்கள் நேற்று(புதன்கிழமை) இரவு ...

மேலும்..

புதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்!

புதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “வடக்கு-கிழக்கில் ‘தமிழ் ...

மேலும்..

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க ஜனாதிபதி இணக்கம்!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று “அம்பன்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாத இறுதியில் யாழ். மாவட்டத்தில் வீசிய அம்பன் புயலால் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழைச் செய்கை ...

மேலும்..

மக்களின் மேம்பாட்டிற்கான குரலாக ஒலிப்போம் – வேட்பாளர் எம்பி. நடராஜா

நிலையான அரசியல் பொருளாதார சமூக அபிவிருத்தியை பெற்றுக்கொடுப்பதற்கான மக்களின் குரலாக ஒலிப்போம் என அகதேசிய முற்போக்கு கழகத்தின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினரும் சுயேற்சைக்குழு-5 தலைமை வேட்பாளருமான எம்.பி.நடராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று(புதன்கிழமை) ...

மேலும்..

பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்திற்கு நாட்டையும், தேசத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் – மஹிந்த!

பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் நாட்டையும் தேசத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குளியாபிட்டிய பகுதியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்கால சந்ததியினருக்காக தமது ஆட்சி காலத்தில் நிறுவப்பட்ட ...

மேலும்..

பொருளாதார மீளுருவாக்கம்: மத்திய வங்கி வழங்கும் சலுகை!

இலங்கை மத்திய வங்கி, நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வழங்கல் வீதம் ஆகியவற்றைக் குறைக்க முடிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் கூட்டம்  நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தலா 100 அடிப்படைப் ...

மேலும்..

கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு!

நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 94ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டவர் ஈரானில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டில் குணமடைந்தோரின் மொத்த ...

மேலும்..

வெலிக்கட சிறைக் கைதிகளின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

கொழும்பு, வெலிக்கட சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அங்குள்ள 315 கைதிகளிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்து 315 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள. இது குறித்த அறிக்கை நேற்று வெளியானதாக தேசிய ...

மேலும்..

சங்குப்பிட்டி விபத்தில் மூவர் படுகாயம்

சங்குப்பிட்டி பகுதியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் சென்ற டிப்பர் வாகனமொன்று, முச்சக்கர வண்டியுடன் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த யோ.பிரியதர்சன் (25), ...

மேலும்..

கட்சி உறுப்புரிமையிலிருந்து விலகினார் ரோஹித்த போகொல்லாகம!

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இராஜினாமா செய்துள்ளார். இற்கமைய தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத் தேர்தல் தேசியப் பட்டியல் மற்றும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளதாக ரோஹித்த போகொல்லாகம அறிவித்துள்ளார். இது தொடர்பிலான கடிதத்தை ஐக்கிய தேசியக் ...

மேலும்..

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

ஐக்கிய அரபு  எமிரேட்ஸில் இருந்து மேலும் 298 பேர் இன்று (வியாழக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இலங்கை எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் -226 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாக இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அவர்கள் அழைத்து ...

மேலும்..

வட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்!

வட மாகாணத்தில்  அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணவர்தனவிற்கு அவசர கடிதமொன்றை இன்று (வியாழக்கிழமை) அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில்,  “காரணம் ...

மேலும்..