இலங்கை செய்திகள்

இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரண்

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி தைப்பொங்கல் நாளன்று சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு வந்த சம்பவத்துடன் இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த சட்டத்தரணி சந்திரசேகரன் ...

மேலும்..

ரட்ண ஜீவன் ஹுலிடம் 500 மில்லியன் நட்டஈடு கோருகின்றார் அங்கஜன் இராமநாதன்

பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலிடமிருந்து 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், ...

மேலும்..

ரஞ்சனுக்கு வாதாடிய சுமந்திரன் ஆனந்தசுதாகரனுக்காக வாதாடதமை ஏன்? – ஜனநாயகப் போராளிகள்

சுமந்திரனின் கருத்திற்கு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். தமிழினத்தின் இருப்பு உயிர்வாழும் உரிமை மறுதலிக்கப்பட்டபோது உங்களின் அதிமேதாவித்தனம் உங்களை உங்களது சிங்கள எஜமானர்களோடு மகிழ்சியாக வைந்திருந்திருக்கலாம் ஆனால் கிராமங்களில் புத்தகப்பைகளை தூக்கி எறிந்துவிட்டு நாங்கள் ஏந்தி ...

மேலும்..

ஆயுதம் ஏந்தி போராடியது தவறு என்றால் சுமந்திரன் சிங்கள மக்களிடம் வாக்குகளை பெற்றிருக்கலாம் – அனந்தி

விடுதலைப் புலிகளையும் தமிழர் தியாகங்களையும் வைத்து வாக்கு பெற்றுவிட்டு பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராடியது தவறு என்றால் சுமந்திரன் சிங்கள மக்களிடம் வாக்குகளை பெற்றிருக்கலாம் என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். விடுதலைப்புலிகளையும், ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலுடன் பிரதமர் மஹிந்தவை சந்திக்கின்றார் சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான ஆவணங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ...

மேலும்..

ரெலோவிற்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். ற்கும் புலிகள் மீது எப்படி புதிதாக பற்று வந்தது? – ஆனந்தசங்கரி கேள்வி

விடுதலைப் புலிகளுடன் பேசவேண்டாம் எனப் போராட்டம் நடத்திய ரெலோவும், விடுதலைப் புலிகளை சுட்டுக்கொன்ற ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியினருக்கும் புலிகள் மீது எப்படி புதிதாக பற்று வந்தது என ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ...

மேலும்..

பெரியநீலாவணை தொடர்மாடியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை: கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் நேரில் சென்று பார்வை…..

பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்கைக்கிள் ஒன்று எரிந்து சாம்பலாகியுள்ளது. (12) நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயினால் குறித்த மோட்டார் சைக்கிள் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளதுடன் இதனை அண்டிய கட்டிடத்தின் சுவர்களிலும் சிறு ...

மேலும்..

சுமந்திரன் பதவியிலிருந்து விலக வேண்டும் : சரவணபவன் சீற்றம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரன் விலகவேண்டும்.இல்லையெனில் அவரை விலக்குவதற்கு நாம் முயற்சி எடுப்போம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார். ஐ பி சி தமிழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரின் பேட்டி காணொளி ...

மேலும்..

சுமந்திரனின் கூற்றால் கொதித்தெழுந்த இளஞ்செழியன்

விடுதலைப்புலிகளின் போராட்ட அரசியல் வழிமுறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு எதிராக இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பீட்டர் இளஞ்செழியன் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். பீட்டர் இளஞ்செழியனின் சகோதரர் ஒருவர் 2009 ...

மேலும்..

சுமந்திரன் கொழும்பின் விசுவாசி, தமிழ்மக்களில் கொஞ்சமும் அக்கறை கொள்ளாதவர் அவர் என வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

சுமந்திரன் கொழும்பின் விசுவாசி, தமிழ்மக்களில் கொஞ்சமும் அக்கறை கொள்ளாதவர் அவர் என வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியாவில் அவர்கள் போராட்டம் மேற்கோள்ளும் இடத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து ...

மேலும்..

சிங்களப் பேரினவாதிகளை உஷார்படுத்தி பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை – கூட்டமைப்பின் தலைமையிடம் ஸ்ரீநேசன் வலியுறுத்து

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் என்ற பதவிக்குரிய குணாதிசயங்களை உதறித் தள்ளிவிட்டுப் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருகின்றார் எம்.ஏ.சுமந்திரன். இவர் தனது கருத்துக்களினால் சிங்களப் பேரினவாதிகளை உஷார்படுத்தி வருகின்றார். இவருக்கு எதிராக கூட்டமைப்பின் தலைமை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்." - ...

மேலும்..

புலிகளின் பயிற்சி ஆசான் வல்வெட்டியில் மரணம்!

தமிழீழ விடுதலை புலிகளின் பயிற்சி ஆசான்களில் ஒருவரான பாலேஸ் மாஸ்டர் இன்று வல்வெட்டித்துறையில் உயிரிழந்துள்ளார். யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர். தமிழீழ விடுதலை புலிகளின் கடற்படையணி உட்பட ஏனைய படையணியை சேர்ந்தவர்களுக்கு நீச்சல் பயிற்சிகள் , ஆழ்கடல் பயிற்சிகள் போன்ற பல ...

மேலும்..

புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பின் ஊடாக சுமந்திரன் அரசியலுக்கு வந்திருக்கக் கூடாது! மாணவனை நினைத்து வெட்கப்படுகிறாராம் விக்கி

சுமந்திரன் விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தம்பி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக அவர் இதுகாறும் இருந்திருக்க முடியும்? தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? இவ்வாறான கருத்தை உடையவர் அவர்களால் ...

மேலும்..

சிங்களவருடன் கூடிக்குலாவியவருக்கு ஈழப்போராட்டம் பற்றி என்ன தெரியும்? சுமந்திரன் மீது சித்தார்த்தன் பாய்ச்சல்

உண்மைதான் ஐந்து வயதில் இருந்தே கொழும்பில் தவழ்ந்து கல்வி கற்று சிங்கள நண்பர்களோடு கூடிக் குலாவும் ஒருவருக்கு எமது மக்களின் உரிமைப் போராட்டம் தெரிந்திருக்கும் அல்லது அதன் வலிகள் உணர்ந்திருக்கும் என்பதில் எந்தவித நியாயமும் இல்லை அதை அவர் உய்த்துணர்ந்திருக்கவும் மாட்டார். அப்படியான ...

மேலும்..

350 இற்கும் மேற்பட்ட மாற்றுவலுவுள்ளோர், முன்னாள் போராளிகளுக்கு தமிழ் சி.என்.என். நிவாரணப் பணி அன்னையர் தினத்தில் அம்பாறையில்!

தமிழ் சி.என்.என். குழுமம் யாழ். மற்றும் வன்னி மாவட்டங்களில் பல்வேறு பட்ட உதவித்திட்டங்களை அதன் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியால் பல்வேறு சேவை நோக்குள்ள நல்லுள்ளம் படைத்தவர்களையும் கனடா தென்மராட்சி சேவை நிறுவனத்தின் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. https://www.facebook.com/100010809667320/videos/1090038344699811/ இதன் தொடர்ச்சியாக அம்பாறை ...

மேலும்..