இலங்கை செய்திகள்

வடக்கில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர்களில் 8 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலும் 4 பேர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப்பொருட்கள் – யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் உதவி

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாகவும், நோய் பரவுதலைக்கட்டுப்படுத்தும் முகமாக அரசினால் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் கடைகள் யாவும் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றாட உழைப்பாளிகள் கூலி வேலை செய்வோர் மற்றும்பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் அன்றாட தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதுடன் ...

மேலும்..

பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ விபத்து

கொழும்பு – பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் சற்றுமுன்னர் ‌தீ பரவல் ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீயிணை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்..

பல வருடங்களுக்கு பின்னர் வவுனியாவில் அமைதி காணும் புத்தாண்டு கொண்டாங்கள்

வவுனியாநிருபர் மலர்ந்திருக்கும் சார்வரி தமிழ்- சிங்கள புத்தாண்டு கொண்டாங்கள் பல வருடங்களுக்கு பின்னர் வவுனியாவில் அமைதியான முறையில் காணப்படுகின்றது. நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து வைரஸ் பரவலை நிறுத்தும் நோக்கில் வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் ஊரடங்குச சட்டம் அமுல்படுத்தப்பட்டது. வவுனியா ...

மேலும்..

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கில் விபத்து : இருவர் படுகாயம்

வவுனியாநிருபர் வவுனிய, பூவரசங்குளம் பகுதியில் இரு மோட்டர் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (14.04.2020) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா பூவரசங்குளம் - செட்டிகுளம் வீதியில் உள்ள மணியர்குளம் ...

மேலும்..

ஊரடங்கு நேரத்தில் சீட்டு விளையாடியோருக்கு பொலிஸார் எச்சரிக்கை.

(எச்.எம்.எம்.பர்ஸான்) கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக்காக, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் பொதுமக்கள் வெளியில் செல்வதையும், ஒன்று கூடுவதையும் தவிர்க்கும் படி பொலிஸார் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர். அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் பகல் மற்றும் இரவு வேளைகளில் ரோந்து ...

மேலும்..

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்தவர்கள் குறித்து ஆராய்வு!

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தொடர்பாக தேடி பார்ப்பதற்கு தீர்மானித்துள்ளது. பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபரால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இதேவேளை இதுவரை பாதிக்கப்பட்ட 219 பேரில் 59 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமைடந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இன்றுமட்டும் 05 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் ஒருவர் நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 219 ...

மேலும்..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – அம்பாறை மாவட்டத்தில் இராட்சத முதலை யானைகள் சுதந்திரமாக நடமாட்டம்!!

பாறுக் ஷிஹான்   கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்   அம்பாறை மாவட்டத்தில்  தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தை அண்டிய பிரதான வீதி  ஊடறுத்து செல்லும் கழியோடை  ஆற்றில் அதிகளவிலான முதலைகள் பெருகி வருகின்றது. இப்பகுதியில் தற்போது  பெய்த மழை காரணமாக ...

மேலும்..

அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஜனாதிபதியிடம் கோரிக்கை

பாறுக் ஷிஹான் உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா நோயினால் மரணிப்போரை அடக்கவும் முடியும், எரிக்கவும் முடியுமென இரு தெரிவுகளை வழங்கியுள்ள நிலையில், இலங்கையிலும் கொரோனா வைரஸால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் ...

மேலும்..

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியில் வைத்து ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஈஸ்ரர் தினமான ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட ...

மேலும்..

கொரோனா வைரஸ் தாக்கம்  காரணமாக வேலையிழந்த 61 ஆயிரம் குடும்பங்களுக்கு ஓரிரு தினங்களில் நிவாரணம்…

நுவரெலியா மாவட்டச் செயலாளர் எம்.பி.ஆர். புஸ்பகுமார தெரிவிப்பு. ஹட்டன் கே.சுந்தரலிங்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கும் காரணமாக இன்று பலர் வேலை இழந்துள்ளனர். அவ்வாறு வேலை இழந்து செய்வதறியாது உள்ள 61 ஆயிரம் குடும்பங்களுக்கு இன்னும் ஓரிருதினங்களில் 5000 ரூபா கொடுப்பனவினை பெற்றுக்கொடுக்க ...

மேலும்..

கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு மற்றும் விஞ்ஞான பீட மாணவர்களின் கொரோனா விழிப்புணர்வுக்கான பாடல்…

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு மற்றும் விஞ்ஞான பீடத்தின் நாடகக் கழகத்தினதும் பல்லூடக கழகத்தினதும் நெறியாள்கையில் உருவாகிய கொரோனா விழிப்புணர்வுக்கான பாடல். இந்த பாடலின் இசை மற்றும் வரிகள் வித்தியாருண்யன் மேற்கொண்டிருந்தார். இந்த காணொணி அமைப்பு ( editing) அர்சாட்கான் மேற்கொண்டிருந்தார். தயாரிப்பு நெறியாள்கையை கோகுல்ராஜ் ...

மேலும்..

ரஞ்சனுக்கு ஏப். 20 வரை விளக்கமறியல்

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. அவர் நேற்று (14) நுகேகொடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.. முன்னாள் ...

மேலும்..